காரைக்காலிலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமை நிலையத்திற்கு வந்த மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி காங்கிரஸ் அரசு நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது முஸ்லிம் களுக்கு விகிதாச்சார அடிப் படையில் 6.1 சதவீத இடஒதுக்கீட்டை ஆட்சிக்கு வந்த உடன் தருவதாக எழுத்து மூலம் தேர்தல் வாக்குறுதி அளித்தது.
அதுபோன்று முஸ்லிம்களுக்கு வட்டி யில்லா கடனுதவி அளிக்கும் திட்டத்தையும் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் 2 சதவீத இடஒதுக்கீட்டை மட்டும் வழங்கிய புதுச்சேரி அரசு மறுபரிசீலனைக்கு பிறகு அதனை அதிகரித்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தது.
ஆனால் அந்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது முஸ்லிம்களுக்கு ஏமாற்றத்தை அளித் துள்ளது. எனவே ஏற்கனவே அறிவித்தபடி விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவீத இடஒதுக்கீடு மற்றும் வட்டியில்லா கடனுதவி திட்டத்தை அமல்படுத்தினால் வரும் சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதுடன், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக களப்பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு இடஒதுக் கீட்டை அளிக்காவிட்டால் மாநில செயற்குழுவில் காங்கிரசுக்கு ஆதரவற்ற நிலையை எடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
THANKS : MAALAIMALAR
No comments:
Post a Comment