இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, August 27, 2013

பாதிக்கப்பட்ட பெண்ணே மன்னித்தாலும் கற்பழிப்பு குற்றவாளிகளை சும்மாவிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளி அல்லது குற்றவாளிகளை மன்னித்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிற நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், கற்பழிப்பு என்பது சமூகத்திற்கு எதிரான குற்றம் ஆகும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி தான் கெடுத்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தாலும் அவரின் தண்டனையை குறைக்கக் கூடாது. மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 
கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த குற்றவாளியை மன்னித்தாலும் அவருக்கான தண்டனை குறைக்கக் கூடாது. கற்பழிப்பு வழக்குகளில் பிற நீதிமன்றங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

THANKS : THATSTAMIL

Sunday, August 11, 2013

பெண்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோ போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது: மத குருமார்கள்

டெல்லி: இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குருமார்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரண்டு ஹெல்ப்லைன்களின் தலைவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இருப்பது மார்க்கப்படி சரியா, தவறா என்று கேட்டு பலர் போன் செய்து வருகின்றனர். 
 
இது குறித்து சன்னி முஸ்லீம்கள் தலைவர் அப்துல் இர்பான் நைமுல் ஹலிம் பிராக்னி மஹ்லி செய்தியாளர்களிடம் போன் மூலம் கூறுகையில், ஒருவரின் முகத்தை ஃபேஸ்புக்கில் பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையில் காதலை, அன்பை தேடுங்கள். ஆன்லைனில் தேடுவதில் பலனில்லை. வியாபார நிமித்தமாக ஒருவர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. பெண்கள் ஃபேஸ்புக்கில் நண்பர்களை தேடுவது சரியல்ல. அதிலும் அவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றார். 
 
இது குறித்து ஷியா மௌலானா சைப் அப்பாஸ் நக்வி கூறுகையில், பெண்கள் தங்கள் தந்தை மற்றும் சகோதரர்களைத் தவிர வேறு யாருக்கும் தங்கள் முகத்தை காட்ட அனுமதி இல்லை. அதனால் ஃபேஸ்புக்கில் அவர்கள் புகைப்படங்களை வெளியிடுவது ஹராம். நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் தாலிபான்கள் போன்று சிந்திக்கவில்லை. 
 
ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் இருக்கலாமா என்று இளைஞர்கள் கேட்டால் இருக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் தங்கள் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடக் கூடாது. இஸ்லாம் பெண்களை புர்கா அணிந்து முகத்தை மறைக்குமாறு கூறுகிறது. அப்படி இருக்க அவர்கள் தங்களின் புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதை எப்படி அனுமதிக்க முடியும். ஆன்லைனில் பல உறவுகள் துவங்கி கசந்துபோனதை பார்த்திருக்கிறோம் என்றார்.
 
THANKS : THATSTAMIL

பொறுப்புள்ள தந்தை, கணவர் மற்றும் அண்ணன் தம்பிக்கு மட்டும் இந்த செய்தி.