70 லட்சம் குழந்தைகளுக்கு இரண்டாம் தவணையாக நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சென்ற முகாம் போலவே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் நாளன்று பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக பேருந்து நிலையம், இரயில் நிலையம், சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் தொலைதூர பகுதியில் வாழும் குழந்தைகளுக்காக சொட்டுமருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகிறார்கள்.
பல்வேறு அரசுத்துறைகள் , ரோட்டரி, லயன்ஸ்கிளப் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் பணியாளர்கள் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள், இலங்கை அகதிகள் குழந்தைகள் கணக்கு எடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
சென்ற முகாம் போலவே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முகாம் நாளன்று பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்குவதற்காக பேருந்து நிலையம், இரயில் நிலையம், சுற்றுலா தலங்களில் 2400 டிரான்ஸிட் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் தொலைதூர பகுதியில் வாழும் குழந்தைகளுக்காக சொட்டுமருந்து வழங்கும் பணியில் 980 நடமாடும் குழுக்கள் ஈடுபடுகிறார்கள்.
பல்வேறு அரசுத்துறைகள் , ரோட்டரி, லயன்ஸ்கிளப் முதலான தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த சுமார் 2 இலட்சம் பணியாளர்கள் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.
தமிழகத்தில் இடம் பெயர்ந்து வாழ்வோர் குழந்தைகள், இலங்கை அகதிகள் குழந்தைகள் கணக்கு எடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கு முதல் சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்படும்.
THANKS : YAHOO NEWS.
No comments:
Post a Comment