இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, October 11, 2012

ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மூன்றாண்டு சிறை

புதுடில்லி: மொபைல் போனில், ஆபாச படங்களை அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து, எஸ்.எம்.எஸ்., மற்றும் மெயில் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை அளிக்கப்படும். இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பெண்களை இழிவுபடுத்தியும், ஆபாசமாக சித்தரித்தும், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக, தண்டனை வழங்கும் வகையில், 1986ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது, நவீன தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு, பல்வேறு விதமான தகவல் தொடர்பு சாதனங்கள் வந்துள்ளன. மொபைல் போன், இணையதளம் ஆகியவற்றின் மூலம், தெரிந்தோ, தெரியாமலோ தகவல்களை எளிதில் பெற முடிகிறது. இதை சிலர், தவறாகப் பயன்படுத்தி, மொபைல் போனில் ஆபாச படங்களை, எம்.எம்.எஸ்., மூலம் அனுப்புவது, பெண்களை ஆபாசமாக சித்தரித்தும், இழிவுபடுத்தியும், எஸ்.எம்.எஸ்., அனுப்புவது அதிகரித்துள்ளது. பெண்களை ஆபாசமாக படமெடுத்து, இணையதளத்தில் பரவ விடுவது போன்ற செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதில், பெரும்பாலும், கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆபத்தை உணராமல் சிக்கிக் கொள்கின்றனர். "இது போன்ற, குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்' என, பார்லிமென்டிலும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று, பிரதமர் தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சட்ட திருத்தம் கொண்டு வர, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, பெண்களை இழிவுபடுத்தி, சித்தரித்து மோசமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வகை செய்யும், ஐ.ஆர்.டபிள்யூ.ஏ., சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. மின்னணு தொடர்பு சாதனங்களான, மொபைல் போன் மற்றும் இணையதளம் வழியாக, பெண்களை ஆபாசமாக சித்தரித்து படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, அதிகபட்சம், மூன்றாண்டு சிறைத் தண்டனை கிடைக்கும். இந்த குற்றத்தை, முதல் முறையாக செய்து மாட்டிக் கொள்பவருக்கு, தற்போது, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இது, 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதிகபட்சம், 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஒரு முறை தண்டனை அனுபவித்து, இரண்டாவது முறையாக, இதே குற்றச் செயல்களில் ஈடுபட்டால், ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதேபோல், 1 லட்சம் அபராதம், 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.

இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரிகள், சந்தேகப்படுவோரின் வீடுகளைச் சோதனையிடவும், பறிமுதலும் செய்யலாம். இது மட்டுமின்றி, விளம்பரம், ஓவியம், எழுத்து என, எந்த வடிவிலும் பெண்களை இழிவுபடுத்தி, படங்களோ, வாசகங்களோ அமைந்தால், அதை தடுக்கும் வகையில், இந்த சட்ட திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தம், வரவிருக்கும் பார்லிமென்டின் குளிர்காலத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இப்படியொரு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, பல உறுப்பினர்கள் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளதால், இது கட்சி பேதமின்றி நிறைவேறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சட்ட வடிவமாக்குவதற்கு முன், சட்ட வல்லுனர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Tuesday, October 09, 2012

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மதி மழுங்கச் செய்து அடிமைகாளாக்கி வரும் Facebook & Twitter! – சிக்காக்கோ யுனிவர்சிட்டி ஆய்வு முடிவு

சமீபத்தி்ல சிக்காக்கோவில் உள்ள Chicago Booth School of Business classified என்ற பல்கலைகழகம் ஜெர்மனியில் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. 18 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தற்போதைய சமுதாயத்தினர் எதில் அதிகம் மோகம் கொள்கின்றனர் என்பதை அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகிள்ளது.
தங்களின் பார்ட்னரிடம் செல்வதை விட Facebook & Twitter இடம் செல்வதை தான் தற்போதை சமுதாயத்தினர் அதிகம் விரும்புகின்றனர். அதில் தான் அதிக மோகம் கொண்டுள்ளனர். அதை விட்டு அவர்களால் வெளியே வர முடிவதில்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செக்ஸ் மற்றும் சிகிரெட்டில் கிடைக்கும் இன்பத்தை விட Facebook மற்றும் Twitter ல் இன்றைய சமுதாயத்திற்கு அதிக இன்பம் கிடைக்கின்றதாகவும் அது எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் எங்கு வேண்டுமானாலும் எப்பொழு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதாலும் அதில் தான் அவர்கள் அதிகம் மோகம் கொள்கின்றனர் என ஆய்வு தெரிவிக்கின்றது…
இன்றைய இளைய சமூதாயம் Facebook மற்றும் Twitter ல் மூழ்கி கிடக்கும் காரணத்தை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளது சிக்காக்கோ பல்கலைகழகம்.
இப்படி மோகம் கொள்ள காரணம் என்ன என்பதை பார்ப்போம்:
அனைவருக்கும் புரியும் விதத்தில் சுருக்கமாக சொல்வதாக இருந்தால் இரண்டு இணையதளங்களும் ”மாமா”  வேலையை தான் பார்க்கின்றனர். அதை தொழில் நுட்ப ரீதியாக செய்கின்றனர். இவைகளை eMaMa என அழைத்தால் அது மிகையாகாது.
பஸ்டாண்டு பஸ்டாண்டா அழைந்து, தெரு தெருவா சுத்தி, பல மணி நேரம் வெயிட் பன்னி, பொண்ணு பையன தேட்ரதும் பையன் போன்ன தேட்ரதும் அந்த காலம் ன்னு சொல்லுவாங்க. ஆனா இப்ப உக்காந்த இடத்துல இருந்துக்கிட்டே பொண்ணு தான் விரும்பிய பையன் கிட்ட கடல போடவும் பையன் தான் விரும்பிய போண்ணு கிட்ட கடல போடவும் பயன்படுத்தப்படும் இணையதளங்கள் தான் இந்த  Facebook மற்றும் Twitter.
”ஒருத்தன், ஒருத்தி” என்பதெல்லாம் போய் ஒரே நேரத்துல ஒரு பையன் பல பொண்ணுங்க கிட்டயும் ஒரு பொண்ணு பல பையங்க கிட்டயும் Facebook மற்றும் Twitter ல் மூலம் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். அதனால் தான் செக்ஸ் சிகிரட்டை விட அதிக மொகம் இதில் வருகின்றது.
இதில் நடக்கும் பல கூத்துக்கள் செய்திகள் படிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில தன்னோட தங்கச்சி கிட்டயே Facebook மற்றும் Twitter ல் கடல போட்ட அண்ணங்க நிரைய பேரு இருங்காங்க.
வேறு யாரோன்னு நினைச்சு தன்னோட மனைவி கிட்டயே கடல போட்டு மாட்டிக்கிட்ட புருசன் எத்தனை பேரு..
போண்டாட்டி புருசன் கிட்ட மாட்டிக்கிட்ட கதை..
அம்மா மகன், அப்பா போன்னு இப்படி எழுவதற்கே கை கூசும் அளவிற்கு இதில் அசிங்கள் அறங்கேரிக் கொண்டிருக்கின்றது..
ஏதாவது ஒரு பெயர் மற்றும் படத்தை போட்டு கணக்கை துவங்கி விடுகின்றனர்.  பிறகு கண்ணுல பட்ரவங்கிட்டயெல்லாம் கடல போட்ரது.. அதான் EMaMa க்கள் (facebook & twitter) இருக்காங்களே அங்க இங்க இருக்கவங்களோட போட்டோ பேயரயெல்லாம் வழிய வந்து காட்ரதுக்கு.. தேவையானத செலக்ட் பன்னிக்க வேண்டியது தான்!
இதில் ஏமாந்து தங்களது கற்பை, பணத்தை இழந்தவர்களின் பட்டியல் ஏராளாம் உள்ளது.
பெற்றோர்களுக்கு..
வெளிநாட்டில் இருக்கும் பெற்றவர்கள் நம்ம புல்ல நல்லா படிக்கட்டும் ன்னு கம்யுட்டர், செல்போனு, இன்டர்நெட்டுன்னு வாங்கி கொடுத்து விடுங்கின்றனர். பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என கண்கானிப்பது இல்லை வீட்டில் உள்ள பெண்களுக்கு விபரம் தெரியாது. பிள்ளைகள் , பெற்றவர்கள் வாங்கிக் கொடுத்ததை நல்லவற்றிற்கு பயன்படுத்தாமல் இது போன்று சீரழிந்து போய் விடுகின்றனர்..
பிள்ளைகளுக்கு செல்போன்களை வாங்கி கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.  ஏன் எனில் தற்போதைய பெரும்பாலான போன்களில் இந்த இரண்டு eMaMa க்களும் இலவச இணைப்பாக வருகின்றனர்.
கணிணையை பொறுத்தரை அறிவை வளர்ந்து கொள்வதற்கு அது இன்றைக்கு மிகவும் அவசியமானது. எனினும் பிள்ளைகள் அதை இது போன்று தவறான விசயங்களுக்கு பயன்படுத்த விடாமல் தடுக்க ஏராளமான Parent control மென்பொருள்கள் உள்ளது.
உதாணரத்திற்கு ஒன்றை குறிப்பிடுகின்றோம்:
இதை கணிணியில் நிறுவி வி்ட்டால் இது போன்று சோசியல் நெட்வொர்க் இணையதளம் மட்டுமல்லாமல் மற்ற தேவையில்லாத எல்லா இணையதளத்தையும் இது  தானாக ப்ளாக் செய்து விடும். அது போன்ற இணையதங்களை கணிணியில் பிள்ளைகளால் பார்க்க முடியாது.
Facebook மற்றும் Twitter போன்ற இணையதளங்கள் நல்லதிற்கு ஆரம்பிக்கப்பட்டதோ கேட்டதற்கு ஆரம்பிக்கப்பட்டதோ எதுவாக இருந்தாலும், கேட்டவைகளுக்கு தான் தனது சேவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றது என தெரியவந்தும் அதை தடுக்க அல்லது நிறுத்த முயற்சி எடுப்பது தான் சமுதாய நலம் கொண்ட நிறுவனங்களின் கடமை.
ஆனால் சமுதாய நலனை மறந்து விட்டு பணம் சம்பாதிப்பதற்காக சமுதாய சீர்கேடுகளை ஊக்கப்படுத்தும் வண்ணம் தினந்தோறும் பல்வேறு வசதிகளை வழங்கி  இளைய சமுதாயத்தை தன் பக்கம் அடிமையாக்கி வைத்துள்ளது இந்த இணையதளங்கள்.
விழித்துக் கொண்டவர் பிழைத்து கொண்டார்!
பேஸ்புக்கில் 83 மில்லியன் போலி கணக்குகள் இருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பேஸ்புக்கே அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

உலகிலேயே இந்தியாவில்தான் மன அழுத்தம் பாதித்தவர்கள் அதிகம்: சுகாதார அமைப்பு ஆய்வில் தகவல்

ஆண்டுதோறும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறன்றது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தற்கொலை எண்ணங்கள், நோய்கள் போன்றவற்றிற்கு காரணமான மன அழுத்தம் ஆண்களைவிட பெண்களிடமே அதிகமாக காணப்படுகின்றது. இதன் பாதிப்பும் பெண்களிடம் 50 சதவிகிதம் அதிக தாக்கத்தை உண்டாக்குகின்றது.

ஆண்களைவிட 3 மடங்கு பெண்கள் சராசரியாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களில் 9 சதவிகிதம் மக்கள், நீண்ட கால மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர். கவலை, ஆர்வமின்மை, குற்ற உணர்வு, தாழ்வு மனப்பான்மை, தூக்கமின்மை, பசியின்மை, களைப்பு, கவனச்சிதைவு போன்றவற்றின் காரணமான நிரந்தர மன அழுத்தத்தால் 36 சதவிகிதம் பேர் துன்பப்படுகின்றனர்.

சராசரியாக 32 வயதை கடந்தவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். 2020-ல் உலகளாவிய வகையில் இயலாமைக்கும், 2030-ல் நோய்களுக்கான பெரிய காரணமாகவும் மன அழுத்தத்தால் ஏற்படும் தாக்கம் ஆதிக்கம் செலுத்தக்கூடும். மன அழுத்தத்திற்கான சிறந்த சிகிச்சை முறைகள் இருந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முன் வருவதில்லை. 

ஆண்டு தோறும் இதனால் 10 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதாவது, தினமும் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கைக்கு 20 மடங்கு அதிகமாக தற்கொலை முயற்சிகளும் நடக்கின்றன. அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். அல்லது அவர்களது முயற்சி தோல்வி அடைகிறது.

மன அழுத்தத்தால் அவர்களுக்கு அதுபோன்ற சிந்தனை வருகிறது. தற்போது உலக மக்கள் தொகையில் 35 கோடி பேர் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியர்களிடையே மன அழுத்த பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக நம் நாட்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி : மாலைமலர் 

Sunday, September 23, 2012

சிக்கனமா திருமணம் நடத்துங்க: மத்திய அமைச்சர் ‘அட்வைஸ்’

புதுடில்லி:ஆடம்பரமாக செலவு செய்து ஏன் திருமணத்தை நடத்த வேண்டும். ஒரு டீ, ஸ்நாக்ஸ் கொடுத்தே சிக்கனமாக திருமணத்தை நடத்‌தலாமே என மத்திய அமைச்சர் அட்வைஸ் கூறியுள்ளார். இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியதாவது: நாட்டில் பெரும்பாலான திருமணங்கள் பாரம்பரிய முறையில் ஆடம்பரமாக நடக்கிறது. இத்திருமணங்களால் செலவு தான் அதிகம், அதிலும் பெண்வீட்டார் தான் திருமணச்செலவுகளால் விழிபிதுங்கிப்போய் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

பொதுவாக திருமணம் ‌என்றால் வீட்டு முன் பந்தல், சீரியல் செட் ,மைக்செட் என வீண் செலவு தான். நாடு உள்ள தற்போது நிதிநிலைமைக்கு தகுந்தவாறு ஆடம்பர திருமணங்களை தவிர்த்து சிக்கனமான திருமணம் செய்யலாமே.

இதனால் இரு வீட்டாருக்கும் செலவு மிச்சம். எனவே டீ, ஸ்நாக்ஸ் வைத்து திருமணம் நடத்தினாலும் நல்லது தான். அதற்காக ஆடம்பரமாக கொண்டாடுபவர்களை எதிர்க்கவில்லை. தடுத்து நிறுத்தவும் முடியாது. யோசனை தான் சொன்னேன். உதாரணமாக 1960-ம் ஆண்டுகளில் நடந்த சிக்கன திருமண முறைகளை நினைவு கூர்ந்தால் தெரியும். சிக்கன திருமணம் குறித்தும் அவற்றை எவ்வாறு செயல்படுத்துவது குறித்தும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.

Wednesday, September 19, 2012

வீட்டுக்குள்ளே இருந்தாலும் கவனமா இருங்க பெண்களே!

மதுரை: பள்ளி, கல்லூரி, அலுவலகம் என்று வெளியே செல்லும் பெண்களுக்குத்தான் அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்றில்லை. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட அச்சுறுத்தல்களும், அவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நம் வீட்டிற்குள் கேபிள், பிளம்பிங், எலக்ட்ரிகல் வேலை என்று நுழையும் சில நபர்கள் நமக்குத் தெரியமாலேயே ஸ்பை கேமராவை பொருத்திவிட்டு சென்றுவிடுகின்றனர். இவற்றை படம் பிடித்து அதனை பல ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து காசு பார்த்து விடுகின்றனர். இது நடந்தது மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் இல்லை. நாகரீக வாசம் அதிகம் எட்டிப்பார்க்காத மதுரை மாவட்டத்தில்தான்.

ஸ்பை கேமரா எச்சரிக்கை

மதுரை அருகேயுள்ள கிராமமும் நகரமும் கலந்த ஒரு ஊரில்தான். இந்த சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலும் அந்த ஊர்ப் பெண்கள் எல்லாம்... வீட்டுக்கு பின்புறத்தில் நான்கு பக்கமும் தென்னந்தட்டி மறைத்துக் கட்டப்பட்டிருக்கும் ‘பாத்ரூம்'களில்தான் குளிக்க வேண்டும், உடை மாற்ற வேண்டும். விஷமக்கார இளைஞர்கள் சிலர், அந்த தட்டிக்கு இடையில் கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளனர். அதேபோல, படுக்கை அறைகளிலும் கேமராக்களை வைத்து படம்பிடித்துள்ளனர். அவற்றையெல்லாம் எம்.எம்.எஸ், ப்ளூ டூத், மெமரி கார்டு என்று தங்களுக்குள் பகிர்ந்தது மட்டுமல்லாது, சி.டி. போட்டு விற்பனையும் செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக நடந்து வந்த இந்த அநியாயம்... சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன், தன்னுடைய செல்போனில் ‘படம்' பார்த்துக் கொண்டிருந்தது ஊரார் கண்களில் சிக்கியது. போலீஸ் வரை போனால் ஊர்ப் பெண்களின் மானம் பறிபோகும் என்று பதறிய ஊர்க்காரர்கள், எல்லா இளைஞர்களின் மெமரி கார்டுகளையும் பறிமுதல் செய்து எரித்திருக்கிறார்கள். பாதிப்பிற்குள்ளான பெண்கள் தற்கொலைக்கு செய்து கொள்ள துணிந்திருக்கின்றனர்.

மொபைல்போன் எச்சரிக்கை

இது, எங்கோ... யாருக்கோ... நடந்த சம்பவமில்லை. எங்கும் நடந்துகொண்டிருக்கும் கொடுமையே. கொஞ்சம் உஷாராக இல்லாவிட்டால், யார் வேண்டுமானாலும் இதில் சிக்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
‘நடிகைகள் தங்கும் பிரமாண்ட ஹோட்டல்களின் அறைகள், புதுமண ஜோடிகள் தங்கும் டூரிஸ்ட் ஸ்பாட் விடுதி அறைகள், ஜவுளிக் கடைகளின் டிரெஸ்ஸிங் ரூம்கள்... இங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் பதுங்கி இருக்கலாம்... ஜாக்கிரதை' என்று ஏற்கெனவே ஏகப்பட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் வீடுதேடி வரும் வில்லங்கங்களை எப்படி சமாளிப்பது என்று கூறியுள்ளனர் நிபுணர்கள்.
சீனாவில் இருந்து ‘ஸ்பை பாத்ரூம் கேமரா'ங்கிற பேரில், டூத் பிரஷ், பாத்ரூம் க்ளீனிங் பிரஷ், சோப் பாக்ஸ்ல எல்லாம் வைக்கிற மாதிரி விதவிதமான கேமரா மார்க்கெட்ல குவியுது. விலை அதிகம்கிறதால, இதை உபயோகப்படுத்தறவங்க பொருளாதார பலம் உள்ள ஹைடெக் ஆசாமிகளாத்தான் இருக்கணும். ஆனால் தற்போது ஹைடெக், காம்பாக்டு மொபைல்கள் வந்துட்டதால, அதை பாத்ரூம்ல வைக்குறதும் ஈஸி, எடுத்த காட்சிகளை ப்ளூ டூத், சி.டினு பகிர்ந்துக்கறதும் சுலபம் என்கின்றனர்.

கவனம் பெண்களே

வீட்டிற்குள் உள்ள பெண்கள்தான் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சிலிண்டர் பாய், தண்ணீர் கேன் கொண்டு வருபவர், கேபிள்காரர் என்று வீட்டிற்குள் நுழைபவர் தெரிந்த நபராகவே இருந்தாலும் அலர்ட்டா இருக்கவேண்டும். அவர் வேலை முடிச்சுப் போறவரைக்கும் கண்காணிச்சுட்டே இருந்து அனுப்பி வைக்கவேண்டும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வெளியே சென்ற உடன் வீட்டிற்குள் உள்ள பொம்மை, நைட் லேம்ப், சுவர்க்கடிகாரம் என வீட்டில் இருக்கும் பொருள் ஏதாவது இடம் மாறியிருந்தால் அதை கண்காணிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர் நிபுணர்கள். அதேசமயம் அநாவசியமா யாரையும் வீட்டுக்குள்ள அனுமதிக்கக் கூடாதுங்கறதுல கவனமா இருக்கணும்.

கடும் நடவடிக்கை

இது குறித்து பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன், "இப்படியொரு சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கவில்லை. விஷயம் வெளியில் தெரிந்ததுமே பல பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால்... பயந்துபோன ஊர்க்காரர்கள் புகார் தரத்தயங்குகிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், ஈவ் டீசிங் புகார் தரப்பட்டிருப்பதால், அந்த வழக்கில் நான்கு பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவான ஒரு நபரை தேடி வருகிறோம். முழுமையான புகார் தரப்படும் பட்சத்தில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை உண்டு என்று கூறியுள்ளார்.

"உங்கள் வீட்டில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்து அதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வேண்டும். பெயரை வெளியிட விருப்பம் இல்லாவிட்டால், போன் மூலமாகவே தகவலாக சொல்லலாம். புகார் கொடுக்கும்பட்சத்தில், போன் பேச்சு (வாய்ஸ் ரெக்கார்ட்), வீடியோ போன்றவற்றை ஆதாரமாகக் கொடுக்கலாம். இவை எதுவுமே இல்லை என்றாலும் கவலைப்படத் தேவைஇல்லை. எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் கொடுத்தாலே... கண்டிப்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம். சம்பந்தப்பட்ட குற்றவாளியின் லேப்டாப், செல்போன் போன்றவற்றிலிருந்தே ஆதா ரங்களை நாங்கள் சேகரித்துவிடுவோம் என்றும் நம்பிக்கை ஊட்டியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி எந்தளவிற்கு பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்பதை... பலத்த அதிர்ச்சியோடு மீண்டும் ஒரு முறை உறைய வைத்திருக்கிறது...

நன்றி : தட்ஸ்தமிழ் 

Tuesday, September 04, 2012

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு-சம்பளம்

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியுள்ளார்.

தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் திராத் கூறியதாவது:

பெண்கள் முன்னேற்றத்திற்குரிய வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு மாதாந்திர சம்பளத்தை கணவன்மார்கள் வழங்கும் மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையில் இம்மசோ‌தா தாக்கல் செய்யப்பட உள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட உள்ள சம்பளத்தை கூட அரசே நிர்ணயிக்கவும் உள்ளது.

Sunday, July 29, 2012

இனியாவது சிந்திப்பார்களா?

பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஆடைகளை அணிந்து கொண்டு உடல் ‎அழகை வெளிக்காட்டிச் சென்றால் என்ன நடக்கும்? நடக்கக்கூடாதது எல்லாம் ‎நடக்கும்.‎
‎ 
இந்த உண்மையைப் புரிந்து கொள்ள மறுத்தவர்களது மண்டையில் ‎உரைக்கும் வகையில் தற்போது பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ‎அதில் ஒன்றுதான் மத்திய பிரதேச அமைச்சரின் சமீபத்திய அறிவிப்பு. இது ‎குறித்து செய்தித்தாள்களில் வெளியான செய்தியை அப்படியே உங்களுக்குத் ‎தருகின்றோம்.‎
ம.பி. அமைச்சர் விஜய்வர்கியா
உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது:‎
‎ 
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை ‎அணியக்கூடாது என்று மத்திய பிரதேச மாநில தொழில் துறை அமைசச்ர் ‎கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.‎
‎ 
கடந்த 9ம் தேதி குவாஹாத்தியில் 20 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை ‎நடுரோட்டில் வைத்து மானபங்கம் செய்த விவகாரம் தொடர்பாக மத்திய ‎பிரதேச மாநில தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ‎கூறுகையில்,‎
‎ 
ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை ‎அணியக்கூடாது. பிறர் தங்களைப் பார்த்தாலே மதிக்கும் அளவுக்கு பெண்கள் ‎உடைகள் இருக்க வேண்டும். அவர்களின் பேஷன், வாழ்க்கை முறை மற்றும் ‎நடத்தை இந்திய கலாச்சாரத்தின்படி இருக்க வேண்டும்.‎
‎ 
ஆனால் துரதிர்ஷடவசமாக பெண்களின் ஆடைகள் ஆண்களைத் தூண்டும் ‎வகையில் உள்ளன என்றார்.‎
‎(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது ‎கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் ‎கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை ‎அல்லாஹ் நன்கறிந்தவன்.‎
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் ‎கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் ‎தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த ‎வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். ‎
அல்குர்-ஆன் 24 : 30, 31‎

THANKS : TNTJ

Sunday, April 08, 2012

தொடர் தோல்வி நரபலி மோடியின் பிரதமர் கனவு "டமால்"

பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திய 2012ஆம் ஆண்டின் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவு செய்யும் வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் 2,66,684 'No Way' வாக்குகள் பெற்று 'No' வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், 2,56,792 'Definitely' வாக்குகள் பெற்று ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். அநாமதேயமான ஒருவர் 3,95,793 'Definitely' வாக்குகள் பெற்று ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் 2,64,193 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் மோடி நேற்று வரை ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான -மெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் உலகில் எந்த தலைவரும் இது போன்ற மோசடி செய்ததில்லை என்றும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டி இருந்தமை நினைவுகூறத்தக்கது.

Friday, April 06, 2012

சென்னையில் 12 பேர் பாதிப்பு: அரசு பொது மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் தடுப்பு ஊசி இன்று முதல் இலவசமாக போடப்படுகிறது


சென்னையில் 12 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. கோவையில் 10 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். வேலூரில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டது. பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு 'டாமி புளு' மாத்திரை கொடுக்கப்படுகிறது.
 
அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 லட்சம் மாத்திரைகள் தயாராக உள்ளன. பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பு ஊசி மருந்தும் உள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளில் இதை போட்டுக் கொள்ள ரூ. 500 வரை செலவு ஆகும். சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் இன்று முதல் இலவசமாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இதற்காக 25 ஆயிரம் தடுப்பு ஊசி மருந்து தயாராக வைக்கப்பட்டுள்ளன. கோடை காலத்தில் பன்றிக் காய்ச்சல் பரவ வாய்ப்பு இல்லை. என்றாலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கான 'டாமிபுளு' மாத்திரை தேவையான அளவு உள்ளது. இது போல பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி மருந்தையும் தேவையான அளவு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
மருந்து வந்ததும், முக்கிய அரசு மருத்துவ மனைகளிலும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு ஊசி இலவசமாக வழங்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Tuesday, April 03, 2012

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை - மத்திய அரசு ஆலோசனை

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக மெக்கா புனித ஹஜ் பயணம் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் வரை இந்தியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள்.
ஹஜ் பயணிகளுக்கு உதவுவதற்காக மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அரசின் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே இந்த மானிய உதவி கிடைக்கும்.
ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 16 ஆயிரம் மானிய உதவி கொடுக்கப்படுகிறது. ஹஜ் பயணித்தின்போது இந்த நிதிஉதவி கொடுக்கப்படும். கடந்த ஆண்டு இந்த மானிய திட்டம் மூலம் 1.25 லட்சம் பேர் பயன்பெற்றனர்.
இந்த நிலையில் ஹஜ் பயணிகளுக்கு மானியம் அளிக்க வேண்டாம் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. மானியத்தை ரத்து செய்யும்படி மத்திய அரசிடம் இஸ்லாமிய அமைப்புகள் மனு கொடுத்துள்ளன.
 
இதையடுத்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானிய உதவி வழங்குவதை நிறுத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் இதுபற்றி கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கொச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்து ஆகலாம் என்றார். மத்திய அரசு இதுபற்றி விரைவில் முடிவு செய்யும் என்றார்.

THANKS : MAALAIMALAR.COM

Tuesday, March 13, 2012

உம்ரா செய்யும் எளிய (அழகிய) முறை

mstw;w mUshsd;;> epfuw;w md;ghsd; my;yh`;t;tpd; jpUg;;ngauhy;;...

my;yh`;Tf;fhf `[;i[Ak;> ck;uhitAk; KOikg;gLj;Jq;fs;!
(my; Fu;Md; 2 : 196)

mfpyj;jpd; Neu; topf;FupajhfTk;> ghf;fpak; nghUe;jpajhfTk; kdpju;fSf;fhf mikf;fg;gl;l Kjy; Myak; gf;fh(vDk; kf;fh)tpy; cs;sjhFk;. mjpy; njspthd rhd;WfSk; kfhNk ,g;uh`PKk; cs;sd. mjpy; Eioe;jtu; mgak; ngw;wtuhthu;.

me;j Myaj;jpy; my;yh`;Tf;fhf `[; nra;tJ> nrd;W tu rf;jp ngw;w kdpju;fSf;Ff; flik. ahNuDk; (Vf ,iwtid) kWj;jhy; my;yh`; mfpyj;jhiu tpl;Lk; Njitaw;wtd;.
(my; Fu;Md; 3 : 96> 97)

`[;> ck;uhtpd; mtrpaj;ijAk; rpwg;GfisAk; jhq;fs; mwpe;jpUg;gPu;fs;. gzk; kw;Wk; clyhy; ehk; nra;Ak; jpahfk; my;yh`;tplj;jpy; Vw;Wf; nfhs;sg;gl Ntz;Lkhdhy; ,g;Gdpj topghl;il Fu;Md; kw;Wk; egp top Kiwg;gb epiwNtw;w Ntz;Lk;. vdNt `[;> ck;uhtpd; Kiwfis vspjhfTk; RUf;fkhfTk; ,jpy; $wpAs;Nshk;. ,jidg; gbj;Jg; gad;ngw Ntz;LfpNwhk;. my;yh`; ek; midj;J tzf;fq;fisAk; Vw;Wf; nfhs;thdhf!

ck;uh nra;Ak; Kiw

1   vy;iyapypUe;J ,`;uhk; mzpe;J nfhs;sNtz;Lk;.
2    jth/g; nra;a Ntz;Lk;.
3    ]aP nra;a Ntz;Lk;.
4    nkhl;ilabf;f Ntz;Lk;.
5   ngz;fs; Mz; Jiz mjhtJ k`;uk; (kzKbf;f tpyf;fg;gl;ltu;fs;) ,y;yhky; `[;> ck;uh nra;tJ jLf;fg;gl;Ls;sJ.

,`;uhk; mzpAk; Kiw

,`;uhk; mzptjw;nfd vy;iyfs; cs;sd. me;j ,lk; te;jTld; Fspj;J ,`;uhk; Milia mzpe;J nfhs;sNtz;Lk;.

tpkhdj;jpy; tUgtu;fs; tpkhdj;jpy; VWtjw;F Kd;Ng Fspj;J ,`;uhk; Milia mzpe;J nfhs;sNtz;Lk;.

Mz;fSf;F ,`;uhKila Mil> ijf;fg;glhj ,U nts;is Jzpfs; MFk;. mjpy; xd;iw Ntl;biag;Nghy; cLj;jpf;nfhs;tJ> kw;nwhd;iw Nkdpapy; Nghu;j;jpf;nfhs;tJ.

,`;uhkpd;NghJ ngz;fs; jhk; tpUk;Gk; Milfis mzpe;J nfhs;syhk;. Mdhy; cliy rupahf kiwf;fhkNyh> moif ntspf;fhl;Lk; tpjkhfNth ,Uf;ff;$lhJ. NkYk; Kfj;ijAk; Kd;dq;iffisAk; kiwf;ff; $lhJ.

jy;gpa;ah

vy;iy te;jJk; ck;uhr; nra;gtu;> yg;igf;f ck;ujd; vd;W epa;aj; nrhy;yp ck;uhit Jtf;fptpl;L jy;gpa;ahit njhlh;e;J $wNtz;Lk;.

yg;igf;> my;yh`{k;k yg;igf;> yg;igf; yh\uPf yf yg;igf;> ,d;dy; `k;j td;dp/kj;j yf ty; Ky;f; yh\uPf yf;.

nghUs; : cd;Dila miog;ig Vw;W te;Njd;. my;yh`;! cd;Dila miog;ig Vw;W te;Njd;. cd;Dila miog;ig Vw;W te;Njd;. ,iz Jizaw;w cd;Dila miog;ig Vw;W te;Njd;. epr;rakhf Gfoidj;Jk; cdf;Nf cupj;jhFk;! NkYk; mUl;nfhilAk;> murhl;rpAk; cd;DilaNj! cdf;F vt;tpj ,iz Jizapy;iy.

jy;gpahit ,`;uhk; mzpe;jjpypUe;J f/ghtpw;Fs; EioAk; tiu nrhy;y Ntz;Lk;. Mz;fs; jy;gpahit rj;jkhfTk;> ngz;fs; nkJthfTk; $wNtz;Lk;. ,`;uhkpd; vy;iyf;F cl;gFjpapy; ,Ug;gtu;fs;> jhk; trpf;Fk; ,lj;jpypUe;Nj ,`;uhk; mzpe;J nfhs;s Ntz;Lk;.

1.       jpUkz xg;ge;jk; kw;Wk; mJ rk;ge;jkhd Ngr;Rf;fspy; <LgLtJ.
2.   kidtpAld; $LtJ. (clYwT nfhs;tJ).
3.   Ntl;ilahLtJ.
4.   clYf;Nfh> Milf;Nfh eWkzk; G+RtJ.
5.   jiyapy; glf;$ba njhg;gp> jiyg;ghif Nghd;wtw;iwf; nfhz;L jiyia kiwg;gJ.
6.   Kb> efk; ntl;LtJ.
7.   nfl;lthu;j;ijfs;> tPz; Ngr;Rf;fspy; <LgLtJ.
8.   ijf;fg;gl;l Mil kw;Wk; fhYiw mzptJ.

f/gj;Jy;yhit mile;jTld;...
gp];kpy;yh`p t];]yhJ t];]yhK myh u]_ypy;yh`; my;yh`Pk;k/g;j`; yP mGthg u`;kjpf

vd;W $wpa gpd;G jth/g; nra;a Muk;gpf;f Ntz;Lk; Muk;gpf;Fk; Kd; Njhspy; cs;s Jz;il tyg;Gw mf;Fspd; fPohf tpl;L ,lg;Gw Njhs; Nkyhf tpl Ntz;Lk;. tyJGw Njhs; G[k; jpwe;Jk;> ,lg;Gw Njhs; G[k; %bAk; ,Uf;f Ntz;Lk;.

jth/g; nra;Ak; Kiw

f/ghit VO Kiw Rw;WtJ xU jth/g; MFk;. f/ghtpy; `[;Uy; m];tj; vd;w fy;ypypUe;Njh my;yJ mjw;F Neuhf epd;Nwh Rw;w Muk;gpj;J kPz;Lk; mjid te;jiltJ xU Rw;whFk;.

gp];kpy;yh`p my;yh` mf;gu; vd;W $wp Rw;iw Muk;gpf;f Ntz;Lk;. xt;nthU Rw;W Kbe;jJk; (tha;g;G ,Ue;jhy;) `[;Uy; m];tj; fy;iy Kj;jkplNtz;Lk;. Kbatpy;iynadpy; mjid Nehf;fp tyJ ifia cau;j;jp my;yh` mf;gu; vd;W $wNtz;Lk;. `[;Uy; m];tj;ij Kj;jkplhtpl;lhy; jth/gpy; ve;jf; FiwAk; Vw;glhJ. vdNt `[Uy; m];tij Kj;jkpLtjw;fhf Nghl;bNghl;L gpwUf;Fj; Jd;gk; juyhfhJ.

Kjy; %d;W Rw;Wf;fspy; eilia neUf;fkhf itj;J Njhs;fis cYf;fp (tpiuthd eil Nghd;W) nry;yNtz;Lk;. (Kjy; %d;W Rw;Wfs; Kbe;jJk; tpUk;gpdhy; Njhs;fis kiwj;Jf;nfhs;syhk;) Vida ehd;F Rw;Wf;fis rhjhuzkhf ele;J nry;yNtz;Lk;. jth/gpd; NghJ ekf;F njupe;j jpf;u;> JM kw;Wk; ek; Njitfis Nfl;L tuyhk;. Fu;Mid Xjpf;nfhz;Lk; tuyhk;. Mdhy; Uf;Dy; akhdp kw;Wk; `[;uj; m];tj; Mfpa ,uz;Lf;Fk; ,ilg;gl;l J}uj;jpy;...

ug;gdh Mj;jpdh /gpj;Jd;ah `]djd; t/gpy; Mfpuj;jp t`]djd; tfpdh mjhgd;dhh;

nghUs; : 'vq;fs; ,iwth! ,t;TyfpYk; vq;fSf;F ed;ikia toq;Fthahf! kWikapYk; ed;ikia (toq;Fthahf!) euf NtjidapypUe;J vq;fisf; fhg;ghahf! vd;w JMit kl;Lk; Xj Ntz;Lk;. ,t;thwhf VO Rw;Wfs; Kbj;Jf;nfhz;L vl;lhtJ KiwAk; `[;uj; m];tj;ij Kj;jkpl Kbe;jhy; Kj;jkpl;Ltpl;L> Kbahtpl;lhy;

tj;j/fpJ} kpk;kfhkp ,g;wh`Pk K]y;yh`;

vd;W XjpathW kfhNk ,g;uh`Pkpw;F Neu; gpd;Nd epd;W njho Ntz;Lk;. mjhtJ ekf;Fk; f/gj;Jy;yhtpw;Fk; ,ilapy; kfhNk ,g;uh`Pk; ,Uf;FkhW njho Ntz;Lk;. ,e;j Kjy; uf;mj;jpy; my;`k;J R+uhtpw;F gpd; Fy; ahma;A`y; fhgp&d; -mj;jpahak; 109 IAk;> ,uz;lhtJ uf;mj;jpy; my;`k;J R+uhtpw;F gpd; Fy;`{ty;yh`{m`J (,/f;yh];) mj;jpahak; 112 IAk; Xj Ntz;Lk;.


,t;thwhf njhOifia Kbj;Jf;nfhz;L ]k; ]k; jz;zPiu mUe;j Ntz;Lk;. ,jd; gpd;du; ]aP (njhq;Nfhl;lk;) nra;tjw;fhf ]/gh thapy; topahf cs;Ns gpuNtrpf;f Ntz;Lk;.

]/gh thapy; topahf gpuNtrpf;Fk;NghJ...
,d;d];]/gh ty; kh;tj kpd; \M,upy;yh`;

nghUs; : ]/ghTk;> ku;thTk; my;yh`;tpd; rpd;dq;fs;.

vd;w kiwtrdj;ij Xjptpl;L ]/ghtpd; kPJ nfhQ;rk; cau;e;J fpg;yhit Kd;Nehf;fp my;yh`;it xUikgLj;jp

my;yh`{mf;gh; - my;yh`{mf;gh; - my;yh`{mf;gh;

yhapyh` ,y;yy;yh`; t`;j`{yh\upfy`{y`{y; Ky;F ty`{y; `k;J t`{t myh Fy;yp i\apd; fjPu;> yhapyh` ,y;yy;yh` t`;j`{> md;[(z)] t/j`;> td]u mg;j`;> t`[ky; m`;(z)]hg t`;j`;

vd;w jpf;iu Xj Ntz;Lk;. gpd;G ,U iffisAk; cau;j;jp ,ad;w msT gpuhu;j;jid nra;a Ntz;Lk;.

,t;thW Kk;Kiw nra;a Ntz;Lk;. gpd;G ]/gh kiyapypUe;J ,wq;fp ku;thit Nehf;fp elf;f Ntz;Lk;. ,ilapy; xU Fwpg;gpl;l ,lj;jpy; NkNy gr;ir epw tpsf;Ffis milfpd;w NghJ Mz;fs; tpiue;J nry;y Ntz;Lk;. ahUf;Fk; rpukj;ij Vw;gLj;j $lhJ. mLj;j gr;ir epw tpsf;Ffis mile;jTld; tpiuit epWj;jp elf;f Ntz;Lk;. ku;thit mile;jTld; rw;W cau;e;J epd;W f/ghit Kd;Ndhf;fp ,U iffisAk; Ve;jp yhapyh`... vd;w Kd;du; Xjpa JMit Kk;Kiw Xjptpl;L ]/ghit Nehf;fp elf;f Ntz;Lk;. ,ilapy; gr;ir epw tpsf;F te;jTld; tpiue;J nry;y Ntz;Lk;. mLj;j gr;ir epw tpsf;F te;jTld; tpiuit epWj;jp elf;f Ntz;Lk;. ,t;thwhf ]/ghtpy; Muk;gpj;J ku;thtpy; KbtJ xU Rw;W> ku;thtpy; Muk;gpj;J ]/ghtpy; KbtJ ,uz;lhtJ Rw;W> ,t;thwhf VohtJ Rw;W ku;thtpy; KbtilAk;. ]/gh> ku;th midj;J Rw;Wf;fspYk; ekf;F tpUg;gkhd JMf;fis Nfl;fNtz;Lk;. jpUkiw trdq;fisAk; Xjyhk;.

]aPia Kbj;Jf; nfhz;l gpd; Mz;fs; nkhl;ilapl;Lf; nfhz;Lk;> ngz;fs; jq;fs; jiyKbapypUe;J xU mq;Fyk; mstpw;F Fiwj;J nfhz;Lk; ,`;uhkpypUe;J tpLgl Ntz;Lk;.

(,`;uhkpypUe;J tpLgl)

nkhl;ilapl;Lf; nfhz;ltUf;F Kk;Kiw guf;fj; Ntz;b egp (]y;) mtu;fs; JM nra;Js;shu;fs;. nkhl;ilaplhky; Kbia Fiwj;J nfhz;ltUf;F xU Kiw kl;LNk JM nra;Js;shu;fs;. vdNt Mz;fs; nkhl;ilapl;L ,`;uhkpypUe;J tpLgLtNj rpwe;jjhFk;.

,j;Jld; cq;fs; ck;uh ,dpNj epiwT ngWfpwJ (,d;\h my;yh`;)

ed;wp rNfh.`kPj;

Tuesday, March 06, 2012

மாணவர்களை பிரம்பால் அடிக்கக் கூடாது: ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமை கமிஷன் கட்டுப்பாடு

புதுடெல்லி, மார்ச். 6-
 
மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் 5-வது நிறுவன தின கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பள்ளிக் குழந்தைகளுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து நாடு தழுவிய அளவில் நடந்த கருத்து கணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 
7 மாநிலங்களில் 6632 மாணவர்களிடம் கேட்கப்பட்ட கருத்து கணிப்பில் பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் மனரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தனர். இதையடுத்து ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வழிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி பள்ளியில் குழந்தைகளை பிரம்பால் அடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. பிரம் படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளிகள் தோறும் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.
 
இந்த குழு பிரம்படி தண்டனை குறித்த புகாரை விசாரிப்பதுடன் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை, மனரீதியான துன்புறுத்தல் ஆகிய புகார்களை 48 மணி நேரத்துக்குள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ தண்டிக்கும் எத்தகைய நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என்று ஆசிரியர்கள் எழுத்து மூலம் உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவித்துள்ளது. பிரம்படி தண்டனை கொடுக்க கூடாது என்பதை பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான நிபந்தனை களில் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. 

Saturday, March 03, 2012

புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச். 3-
 
தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.   இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை http://www.hajcommittee.com/ என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
 
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.  
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Friday, March 02, 2012

போதையில் வண்டி ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்; 4 ஆண்டு சிறை

புதுடில்லி: குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், குறைந்தபட்சம் 2,000 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், மேலும், ஆறு மாதங்களில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போதுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு, இனி கடுமையான அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும். தற்போதுள்ளதை விட, ஐந்து மடங்கு அதிக தண்டனை விதிக்கப்படவுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், குறைந்தபட்சம் 2,000 ரூபாயிலிருந்து, அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், ஆறு மாதங்களில் இருந்து, நான்கு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவரிடம் நடத்தப்படும் பரிசோதனையில், அவரது 100 மி.லி., ரத்தத்தில், 30 மி.கிராம் வரை ஆல்கஹால் கலந்திருந்தால், அது குற்றக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. 30லிருந்து 60 மி.கிராம் வரை ஆல்கஹால் கலந்திருந்தால், ஆறு மாத சிறைத் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். அதிகபட்சமாக, 100 மி.லி., ரத்தத்தில், 150 மி.கிராம் ஆல்கஹால் கலந்திருந்தால், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த தண்டனை விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள், மறுபடியும் இதே குற்றத்தைச் செய்தால், அவருக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதேபோல், விபத்தில் உயிரிழப்போருக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரிக்கும் வகையிலும், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏற்பட்டால், 1 லட்சம் ரூபாயும், கடுமையான காயம் அடைந்தால், 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும்.

Tuesday, February 28, 2012

BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது.

 BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள்.

மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.

Features:
* இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.

* கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

* Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.

* பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.

* மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.



Specification:

*    CPU -  IMAP210 1GHz
*    O/S  - Android 2.3
*    RAM  - DDR2 256MB
*    FLASH - 2GB
*    TF card - TF card support to 32G
*    Wifi -  802.11b/g/n
*    LCD resolution -  7” TFT, 16:9, 800*600
*    Touch screen - resistive touch screen
*    G-Sensor  - Rotator screen, 3D games
*    Camera - 0.3MP
*    USB  - USB x 1
*    Battery -  Li-ion 3000mah 5V2A
*    Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
*    Flash Support  - Adode Flash 10.3
*    Email  - Send/receive email online
*    Audio  - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV

முன்பதிவு செய்ய:*    இந்த மலிவு விலை டேப்லேட் கணினிகளை முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்க்கு முதலில் இந்த லிங்கில் PRE-BOOK NOW கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

*    அதில் உள்ள PRE-BOOK NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

* அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தவும்.

* இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் bookking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.

* அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
*  Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.

* மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண் மூலமாகவோ, ஈமெயில் முகவரி மூலமாகவோ விசாரித்து கொள்ளலாம்.

Thanks- BSNL launches 3 Android tablets, price starts Rs.3250 Pre-Book Now [How-To]

THANKS : MR. SULTHAN

ரேஷன் கார்டை புதுப்பிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம்;

தமிழகத்தில் குடும்ப அப்ட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு அளித்துள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில், குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது.

மொத்தமுள்ள 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன் லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ளவும் இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள்   http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணைய  தள  முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம்.  இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம். 

ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது.  மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ், கேட்டுக் கொண்டுள்ளார்.