இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, September 04, 2012

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு-சம்பளம்

வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு கணவன், மாதாந்திர சம்பளம் வழங்குவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திராத் கூறியுள்ளார்.

தலைநகர் டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் திராத் கூறியதாவது:

பெண்கள் முன்னேற்றத்திற்குரிய வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளது. வீட்டில் அன்றாட பணிகளை செய்யும் மனைவிகளுக்கு மாதாந்திர சம்பளத்தை கணவன்மார்கள் வழங்கும் மசோதா தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் மத்திய அமைச்சரவையில் இம்மசோ‌தா தாக்கல் செய்யப்பட உள்ளது. பெண்களுக்கு வழங்கப்பட உள்ள சம்பளத்தை கூட அரசே நிர்ணயிக்கவும் உள்ளது.

No comments:

Post a Comment