இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Wednesday, December 25, 2013

Monday, September 30, 2013

எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது: முதல்வர்களுக்கு ஷிண்டே கடிதம்.

டெல்லி: தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது செய்யப்படமால் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. 
 
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது. தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தாங்கள் வேண்டும் என்றே குறிவைக்கப்படுவதாக சில சிறுபான்மையின வாலிபர்கள் கருதுகின்றனர். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும். 
 
தீவிரவாதத்தை ஒடுக்கும்போது சமுதாய நல்லிணக்கத்தை மனதில் வைத்து சட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். தவறுதலாக கைது செய்யப்படும் சிறுபான்மையினரை உடனே விடுவிப்பதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அவர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கடந்த மே மாதம் 39 சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அரசு அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஷிண்டேவின் இந்த திடீர் உத்தரவுக்கு பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

THANKS:THATSTAMIL

Thursday, September 26, 2013

தேர்தலில் அனைத்து வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வாக்காளருக்கு உண்டு: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு என்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. 
 
தேர்தல்களில் யாருக்குமே வாக்களிக்காமல் இருப்பது தொடர்பாக பொதுநலன் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின்படி, தேர்தலில் போட்டியிடுகிற அனைத்து வேட்பாளர்களையுமே நிராகரிக்கிற உரிமை வாக்காளுக்கு உண்டு. 
 
அத்துடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் "மேலே உள்ள வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை" என்பதை பதிவு செய்யக் கூடிய பட்டனையும் தேர்தல் ஆணையம் இணைக்க வேண்டும். மேலும் இப்படி யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவு செய்கிற வாக்காளர் பற்றிய விவரத்தை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 
மேலும் இப்படி நிராகரிப்பு வசதியை ஏற்படுத்தினால் தேர்தலில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும். வேட்பாளர்கள் அனைவரும் நிராகரிக்கப்படுவார்கள் என்ற அச்ச உணர்வால் நேர்மையானவர்கள் மற்றும் மக்களின் பிரதிநிதியாக செயல்படும் திறன் கொண்டவர்களை மட்டுமே தேர்தலில் நிற்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் கிரிமினல் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

THANKS : THATSTAMIL

 

Friday, September 20, 2013

மாணவர்கள்,ஆசிரியர்கள் பள்ளியில் மொபைல் போன் பயன்படுத்த தடை

சென்னை: பள்ளி கல்வித்துறையில், மொபைல் போன் பயன்படுத்த, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், மொபைல் போன் பயன்பாட்டுக்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் மொபைல் போன் அதிகரித்துள்ளதாக தெரிய வந்ததை அடுத்து, தொடக்கக் கல்வித் துறை கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை கீழ் இயங்கும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில், 2007ம் ஆண்டிலேயே, மொபைல் போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. எனினும், நகரப் பகுதிகளில் உள்ள, பள்ளி மாணவர்களில் ஒரு சிலர், மொபைல் போனை கொண்டு வருகின்றனர். இதை முற்றிலும் தடுப்பதற்கு, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நடவடிக்கை:
ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர், வயதில் மிகவும் சிறியவர்கள் என்பதால், இந்த பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இல்லை என்ற நிலை, இருந்து வந்தது. ஆனால், தற்போது, வயது வித்தியாசம் இன்றி, சிறுவர்களும், மொபைல் போன்களை, அதிகளவில் பயன்படுத்துகின்றனர். அரசு பள்ளிகளில், இது போன்ற நிலை இல்லை என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், தனியார் பள்ளிகளில், மொபைல் போன் பயன்பாடு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, தற்போது, தொடக்க கல்வித்துறை, கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர், இளங்கோவன் வெளியிட்ட அறிவிப்பு: பள்ளி வளாகத்தில், மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கவனம் திசை திரும்புகிறது. எனவே, மாணவ, மாணவியர், பள்ளிக்கு, மொபைல்போன் கொண்டு வராமல் இருக்க, பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு, உரிய அறிவுரை வழங்க வேண்டும்.


ஆசிரியர்களுக்கும் தடை:
வகுப்பு அறைகளில், ஆசிரியர், மொபைல்போனை பயன்படுத்தக் கூடாது; பாடம் நடத்தும்போது, மொபைல் போனை, "சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தகவல் தெரிவித்து, விதிமுறையை, தவறாமல் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

THANKS : DINAMALAR

Thursday, September 19, 2013

கம்ப்யூட்டர் வேலையா?: உங்கள் கண்கள் பத்திரம்

சென்னை: இந்த உலகைப் பார்க்க உதவும் கண்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. அழகிய உலகைப் பார்த்து ரசிக்க ஆண்டவன் கொடுத்த அருட்கொடை தான் கண்கள். அத்தகைய கண்களை நாம் தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் காலில் சக்கரம் கட்டியது போல் ஓடுகிறோம். இந்த ஓட்டத்தில் உடல் நலத்தை பேண பலர் தவறி விடுகின்றனர். அதன் பிறகு கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை மருத்துவமனையில் கொண்டு போய் கொடுக்கின்றனர். மனிதனுக்கு கண்கள் என்பது மிகவும் முக்கியம். அதை பாதுகாக்க சில எளிய அறிவுரைகள்.

1.காலை முதல் மாலை வரை கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து பலர் வேலை செய்கின்றனர். அவர்களில் பலருக்கு கண் எரிச்சல், வலி ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றால் அவர் சொல்லும் முதல் அறிவுரை இது தான் அடிக்கடி கண் சிமிட்டுங்கள் சார். கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்கள் கண்ணை சிமிட்டக் கூட மறந்துவிடுகிறார்கள். தயவு செய்து அவ்வப்போது கண்ணை சிமிட்டி அதை பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.

2.கம்ப்யூட்டர் வேலை பார்க்கும் நபர்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ள ஆன்ட்டி கிளேர் கண்ணாடி அணியலாமே.

3.கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தங்கள் இரு உள்ளங்கைகளை நன்றாக தேய்த்து அதை கண்கள் மீது வைக்கலாம்.

4.இருக்கையிலேயே அமர்ந்திருக்காமல் மணிக்கு ஒரு முறையாவது எழுந்து சென்று மரம், செடி கொடிகளைப் பார்த்து கண்ணை ரிலாக்ஸ் செய்யுங்கள்.

5.கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துகிறவர்கள் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். லென்ஸை தொடும் முன்பு கையை நன்றாக கழுவவும்.
6.கீரை கண்களின் தோழன் என்றே கூற வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று முறையாவது கீரை சாப்பிடுங்கள். மேலும் தினமும் கேரட் சாப்பிடுவதும் கண்ணுக்கு நல்லது.
THANKS : THATSTAMIL

Tuesday, August 27, 2013

பாதிக்கப்பட்ட பெண்ணே மன்னித்தாலும் கற்பழிப்பு குற்றவாளிகளை சும்மாவிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளி அல்லது குற்றவாளிகளை மன்னித்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிற நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், கற்பழிப்பு என்பது சமூகத்திற்கு எதிரான குற்றம் ஆகும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி தான் கெடுத்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தாலும் அவரின் தண்டனையை குறைக்கக் கூடாது. மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 
கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த குற்றவாளியை மன்னித்தாலும் அவருக்கான தண்டனை குறைக்கக் கூடாது. கற்பழிப்பு வழக்குகளில் பிற நீதிமன்றங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

THANKS : THATSTAMIL

Sunday, August 11, 2013

பெண்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் போட்டோ போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது: மத குருமார்கள்

டெல்லி: இந்திய இளைஞர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று மத குருமார்கள் தெரிவித்துள்ளனர். இஸ்லாம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்க உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரண்டு ஹெல்ப்லைன்களின் தலைவர்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இருப்பது மார்க்கப்படி சரியா, தவறா என்று கேட்டு பலர் போன் செய்து வருகின்றனர். 
 
இது குறித்து சன்னி முஸ்லீம்கள் தலைவர் அப்துல் இர்பான் நைமுல் ஹலிம் பிராக்னி மஹ்லி செய்தியாளர்களிடம் போன் மூலம் கூறுகையில், ஒருவரின் முகத்தை ஃபேஸ்புக்கில் பார்க்க முடியாது. நிஜ வாழ்க்கையில் காதலை, அன்பை தேடுங்கள். ஆன்லைனில் தேடுவதில் பலனில்லை. வியாபார நிமித்தமாக ஒருவர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினால் அது ஏற்றுக்கொள்ளக்கூடியது. பெண்கள் ஃபேஸ்புக்கில் நண்பர்களை தேடுவது சரியல்ல. அதிலும் அவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றார். 
 
இது குறித்து ஷியா மௌலானா சைப் அப்பாஸ் நக்வி கூறுகையில், பெண்கள் தங்கள் தந்தை மற்றும் சகோதரர்களைத் தவிர வேறு யாருக்கும் தங்கள் முகத்தை காட்ட அனுமதி இல்லை. அதனால் ஃபேஸ்புக்கில் அவர்கள் புகைப்படங்களை வெளியிடுவது ஹராம். நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. நாங்கள் தாலிபான்கள் போன்று சிந்திக்கவில்லை. 
 
ஃபேஸ்புக் அல்லது ட்விட்டரில் இருக்கலாமா என்று இளைஞர்கள் கேட்டால் இருக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி பெண்கள் தங்கள் புகைப்படங்களை ஆன்லைனில் வெளியிடக் கூடாது. இஸ்லாம் பெண்களை புர்கா அணிந்து முகத்தை மறைக்குமாறு கூறுகிறது. அப்படி இருக்க அவர்கள் தங்களின் புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவதை எப்படி அனுமதிக்க முடியும். ஆன்லைனில் பல உறவுகள் துவங்கி கசந்துபோனதை பார்த்திருக்கிறோம் என்றார்.
 
THANKS : THATSTAMIL

பொறுப்புள்ள தந்தை, கணவர் மற்றும் அண்ணன் தம்பிக்கு மட்டும் இந்த செய்தி.

Monday, June 03, 2013

பெண்கள் பள்ளிகளில் இனி ஆசிரியைகள் மட்டுமே... தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாணவிகள் பாலியல் பிரச்சினைக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், இனிமேல் பெண்கள் பள்ளிகள் பெண் ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 இந்த கல்வியாண்டு முதலே இது அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பெண்கள் பள்ளிகளில் பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும். இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். 
 
அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அடுத்த கவுன்சிலிங்கின்போதும் அமுல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், டிரான்ஸ்பர் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
THANKS : THATSTAMIL.COM

Friday, April 12, 2013

குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுப்பதற்கான சில யோசனைகள்!


பொய் சொல்லக் கூடாது பாப்பா..” என்றான் பாரதி.  இதைப் பாடப் புத்தகங்களில் நாம் படித்திருக்கிறோம். நம் பிள்ளைகளும் படிக்கின்றார்கள். ஆனாலும், பொய் சொல்கிறோம்.  இன்றைய உலகில் பொய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

அதற்காக, ஒருக்காலும் பொய் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொய் பேசுபவர் எனத் தெரிந்தால் இந்தச் சமுதாயம் மதிக்காது. பொய் சொல்லாமல் இருப்பது பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. அதை நம் குழந்தைகளிடமிருந்தாவது நடைமுறைப் படுத்துவோம்.
குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுப்பதற்கான சில யோசனைகளைப் பார்ப்போம்.

1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.

2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது,இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு.

3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்).

4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.

5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).

6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.
7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.

8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.

Friday, January 25, 2013

ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு இனி ஒருமுறை மட்டுமே அரசு மானியம்

புதுடெல்லி, ஜன.25-

இஸ்லாமியர்களின் புனிய தலங்களாக கருதப்படும் மக்கா, மதீனா நகரங்களுக்கு உலக நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் ‘ஹஜ்’ புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வகையில், இந்தியாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.

ஏற்கெனவே ஒருமுறை ஹஜ் யாத்திரை சென்றவர்கள் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மறுமுறையும் அரசின் மானிய உதவியுடன் ஹஜ் பயணம் செல்ல முன்னர் அனுமதிக்கப் பட்டிருந்தது.

இந்த நடைமுறையினால் முதன் முதலாக ஹஜ் பயணம் செல்ல விரும்பும் மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனை கருத்தில் கொண்ட இந்திய ஹஜ் கமிட்டி புதிய நடைமுறையை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

இது தொடர்பாக, முசாபர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஷாகிர் ஹுசைன் கூறியதாவது:-

இரண்டாவது முறையாக ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு இனி அரசின் மானிய உதவி கிடைக்காது. இதுவரை ஹஜ் யாத்திரை செல்லாத இஸ்லாமியர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் மானியத்துடன் ஹஜ் செய்ய விரும்புவோர், ‘நான் முதன் முறையாக இப்போது தான் ஹஜ் யாத்திரை செல்லப் போகிறேன்’ என்று உறுதிமொழி பத்திரத்தை மானியம் கோருவதற்கான விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தவறான தகவல்களை அளித்து அரசின் மானியத்தை பெற முயல்பவர்களின் அரசின் மானியத்தை பெற முயல்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

THANKS : MAALAIMALAR

Tuesday, January 08, 2013

”ஒழுங்கான ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம்” காப் பஞ்சாயத்

ஹிசார் கிராமத்தில் இளம் பெண்கள் ஜீன்ஸ், டி சர்ட் அணிய கப் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஹிசார் கிராமத்தில் பெண்கள் செல்போன் பயன்படுத்த கப் பஞ்சாயத்து தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிய தற்போது பஞ்சாயத்தார்கள் தடை விதித்துள்ளனர்.

கேதர் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதை பஞ்சாயத்து தலைவர் ஷம்ஷேர் சிங் செய்தியாளர்ளிடம் தெரிவித்துள்ளார்.

பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்து கொண்ட சாந்தி தேவி என்ற நடுத்தர வயது பெண் கூறுகையில், பஞ்சாயத்து நல்ல முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும். ஒழுங்காக ஆடை அணியாதது தான் கற்பழிப்புக்கு முக்கிய காரணம் ஆகும் என்றார்.

ஹிசார் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் மகாவீர் சிங் கூறுகையில், பஞ்சாயத்து முடிவை வரவேற்கிறோம். யாராவது டிஜே பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தால் அவர்களுக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.

இஸ்லாமிய சட்டம் தான் மனித குலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு என்பதை உலகம் இன்று உணர்ந்து வருகின்றது… அல்ஹம்துலில்லாஹ்!

இறைவன் திருமறையில்..

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக!அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 33:59)

THANKS:TNTJ.NET