இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, December 16, 2010

யா அல்லாஹ் இவர்களுக்கு ஹிதாயத்தை கொடு

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டம் ஜி.தும்மலப்பட்டி கிராம காவல் தெய்வங்களின் திருவிழாவில் முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

 ஜி.தும்மலப்பட்டியில் அய்யனார், கன்னிமார்கள்,வேட்டைக்காரன், சடையாண்டி உள்ளிட்ட 21 கிராம காவல் தெய்வங்கள் திருவிழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான ஊர்வலத்தில், அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும், சுவாமி சிலைகளை ஊர்வலமாக தூக்கி வந்தனர். தும்மலப்பட்டி ஜமாத் முஸ்லிம்கள் பங்கேற்று எலுமிச்சை சூறை, சுவாமிக்கு சாமரங்கள் வீசினர். பெரிய பள்ளிவாசல் அருகே ஊர்வலம் வந்தபோது ஜமாத் தலைவர் ஜாகீர்உசேன்,பொருளாளர் சத்தார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜமாத் தலைவருக்கு பூசாரி பாலகிருஷ்ணன் பிரசாதங்கள் வழங்கினார். முஸ்லிம்கள் சுவாமி சிலைகளை வரவேற்றது,கிராமத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியது.
இது குறித்து ஜமாத் தலைவர் கூறும்போது, ""எங்களுக்கும் காவல் தெய்வங்களாக இருப்பதால் நாங்களும் பங்கேற்றோம். இது தவிர அனைத்து இந்து திருவிழாக்களிலும் பங்கேற்போம்,'' என்றார்.ஊர்வலம் முடிந்ததும் சுவாமி சிலைகள் மட்டரைப்புளி என்ற இடத்தில் வைக்கப்பட்டு, அரிசி,தேங்காய்,மிளகாய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை காணிக்கையாக படைத்து வழிபட்டனர்.

நன்றி : தினமலர்

No comments:

Post a Comment