அபுதாபி: அபுதாபி முஸ்லிம் பேரவை (ஐஎம்எஃப்)சார்பில் புத்தாண்டு நிகழ்ச்சி மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சி அபுதாபி பப்ளிக் பார்க்கில் ஜனவரி முதல் தேதியன்று காலை 9 மணிமுதல் மாலை 7 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஐ.எம்.எஃப்., அமைப்பின் முஹையதீன் அப்துல் காதார் தலைமை வகித்தார். புத்தாண்டு சிறப்புடன் அமையவும் தமிழர்கள் எங்கெங்கும் சுபிட்சமாக வாழவும் பிரார்த்திப்பதாகக் அமைப்பின் தலைவர் தெரிவித்தார். குழந்தைகள் பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஐ.எம்.எஃப்., அமைப்பின் தலைவர் முஹையத்தீன் அப்துல் காதர், மௌலவி ஹாபிஜ் ஹபிபுர் ரஹ்மான் மஜஹரி, மௌலவி ஹூஸைன் மக்கி உள்ளிட்டோர் வழங்கினர். நிகழ்ச்சிகளை பொதுச்செயலாளர் காதர்மீரான் நடத்தினார். கூத்தாநல்லூர் அமானுல்லா கான், அப்துல் அஜீஸ்,ஷர்புதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இவ்விழாவிற்கு நோபல் மெரைன் ஷாஹுல் ஹமீது, பனியாஸ்மெட்டீரியல் ஹமீது ஹாஜியார், என்ஜினியர் மக்பூல், சையத் அஹமது, ஜெயினுலாபுதீன், லியாக்கத்அலி, இம்தியாஸ், பத்திரிக்கையாளர் வி.களத்தூர் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எவர் ஒருவர் ஒரு சமூகத்தினரை பின்பற்றுகிறாரோ அவர் அவர்களை சார்தவரே! அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல்: அஹ்மத் 4968
No comments:
Post a Comment