ஜன., 25 தேசிய வாக்காளர் தினமாக கொண்டாட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்கான, "லோகோ' வெளியிடப்பட்டுள்ளது.ஜன., 25 செவ்வாயன்று தேசிய வாக்காளர் தினம். அன்று, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாக்காளர் விழிப்புணர்வு முகாமும், ஓட்டுசாவடிகளில் வாக்காளர் தினம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "ஸ்லோகன்கள்' வெளியிடப்பட்டுள்ளது.
அவை
* வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம்; வாக்களிக்க தயார் என்போம்.
* மதித்திடுவீர் ஜனநாயகத்தை... வாக்களிக்க மறவாதீர்.
* உங்களது எதிர்காலத்தின் குரல் உங்களது வாக்கு; அதை சரியாக பயன்படுத்துவீர்.
* பொறுப்புள்ள குடிமகனின் அடையாளமாக வாக்களிப்போம்; ஜனநாயகத்தை தழைக்க செய்வோம்.
* விலைமதிப்பில்லாத உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பதா...
* உங்கள் வாக்கை சரியாக பயன்படுத்துவீர்; எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்.
* உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்; சரியாக பயன்படுத்துவீர்.
இதுபோன்ற கருத்துக்களை வாக்காளர்களிடம் எடுத்து கூற வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் ஆலோசனை கூறியுள்ளது.
இதுபோன்ற கருத்துக்களை வாக்காளர்களிடம் எடுத்து கூற வேண்டும் என, தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் ஆலோசனை கூறியுள்ளது.
THANKS - DINAMALAR.
No comments:
Post a Comment