ஹைதராபாதில் உள்ள மக்கா மசூதியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் தனக்குத் தொடர்பு இருப்பதாக இந்துத்துவா பயங்கரவாதியான சுவாமி ஆசிமானந்த் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார். மேலும், 2006 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மலேகான் மசூதி ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பும் சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் இரயில் வெடிகுண்டு தாக்குதலும் இந்துத்துவா பயங்கரவாதிகளால்தான் நடத்தப்பட்டது. இது குறித்து தனக்குத் தெரியும் என்றும் ஆசிமானந்த் கூறியுள்ளார்.
தன்னுடைய செயல்களுக்காகத் தனக்கு மரண தண்டனை கிடைக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். என்றாலும் மக்கா மசூதி குண்டு வெடிப்பில் தவறாக் கைது செய்யப்பட்டுள்ள கலீம் தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
கலீம் அவர்கள் சிறையில் ஆசிமானந்த் விடம் சிறையில் மனிதநேயத்துடன் நடந்து கொண்டது தான் இவரது இந்த வாக்குமூலத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இது பற்றி டைம்ஜ்ஆஃப்இந்தியாவின் செய்தி
http://timesofindia.indiatimes.com/india/Aseemanand-owns-up-to-strike-on-Mecca-Masjid/articleshow/7238763.cms
நன்றி : www.tntj.net
No comments:
Post a Comment