இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, June 30, 2011

கல்விக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் மூல வேத நூலான புனித மிகு அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டது. ஒன்றே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்குகின்றது. கல்வியை அரசியலை ஆய்வியலை வலியுறுத்தும் நூற்றுக்கணக்கான அல்குர்ஆன் வசனங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக அல்குர்ஆனின் 39:09, 17:85 27:52, 29:43, 35:28, 20:114ம் இலக்க வசனங்கள் அல்குர்ஆன் கல்விக்கு அறிவியலுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

* “கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்” (அல்- ஹதீஸ், புகாரி)
* “ ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
* “மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர” (ஹதீஸ்) இவ்வாறு அறிவின், அறிஞர்களின் சிறப்பை வலியுறுத்தும் நூற்றுக் கணக்கான நபி மொழிகள் பாபுல் இல்ம் என்ற ஹதீஸ் பிரிவில் காணப்படுகின்றன.

பெருமானார் (ஸல்) அவர்களுக் குப் பின் கிலாபத் ஆட்சி செய்த நாற்பெரும் கலீபாக்களும், அதன் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உமையாக்கள், அப்பாஸிகள், உதுமானிய ஆட்சியாளர்கள் அனைவரும் இஸ்லாம் வலியுறுத்திய கல்விக்கு தமது அரசாங்க செயற்பாடு களினூ டாக உரிய அந்தஸ்தையும், கெளரவத்தையும் வழங்கி வந்தார்கள். முக்கியமாக முஸ்லிம்கள் அனைவ ருமே குர்ஆனை ஒதவும் விளங்கவும் செயற்படுத்தவும் தூண்டப்பட்டார்கள்.

அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலிபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக ‘தாருல் உலூம்’ (அறிவியல் கூடம்) தாருல் ஹிக்மா, பைதுல் ஹிக்மா என்பன போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையங்கள் இவற்றில் மிக முக்கியமானவைகளாகும். இக்கல்வி நிறுவனங்கள், விவசாய, இரசாயனவியல், உயிரியல், புவிவியில், தர்க்கவியல்,கணக்கி யல், மருத்துவம், தத்துவவியல், மிருக வியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.

இஸ்லாமிய கல்விநிலையங்களுக்கும் (மத்ரஸாக்கள் தாராளமான நிதி வசதிகளையும் மாணவர்களுக்கான இலவசக் கல்வி, புலமைப் பரிசில் களையும் தொடர்ந்து வழங்கி வந்தன. இதன் காரணாக இஸ்லாமிய உலகம் அதன் பொற்காலம் என்ற அறிவியல், அரசியல், பொருளாதார, சமூக மேம் பாட்டு வளர்ச்சியைக் கண்டு உலகில் தன்னிகரில்லாத கெளரவத்தை உலக அரங்கில் பெற்றிருந்தது.

இன்று பொதுவாக உலகில் மத சார்பான கல்வி முறைகளும், மதச்சார்பற்ற கல்வி முறைகளும் காணப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரை இவ்விரண்டையும் இணைத்த கல்வி முறைமை ஒன்றே இஸ்லாத்தின் வழிகாட்டலும், இன்றைய அவசியத் தேவையுமாகும்.

பொதுவாக இன்றைய மேற்குலகக் கல்வி சட்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வியாக வகுக்கப்பட்டுள்ளன. மேற்குலகக் கல்வியின் இன்றைய குறிக்கோள், தேசத்தின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண் டுள்ளது. அது மதசார்பான, சமூக ஒழுக்கவியல் சார்பான எதையும் அக் கறையோடு நோக்குவதில்லை. சர்வதேச ரீதியாக கல்வியை இன்று விருத்தி செய்ய முற்பட்டுள்ள உலக வங்கியும இக்குறிக்கோளையே கல்விப்பணியில் அடிப்படையாகக் கொண்டுள்ளன. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை கல்வியில் நோக்கத்தை அது பின்வருமாறு வரையறுக்கின்றது.

1. ஒழுக்க மேம்பாடு
2. இஸ்லாமிய தனித்துவத்தை- தலைமைத்துவத்தை உருவாக்குதலும் விருத்தி செய்தலும்
3. எம்மைப் படைத்த வல்ல அல் லாஹ்வுக்கு பொறுப்புக் கூறல்.
அண்மையில் நடைபெற்ற உலக முஸ்லிம்களின் முதலாவது கல்வி மாநாடு கல்வியின் நோக்கம் பற்றிய மேற்கண்ட குறிக்கோள்களை உறுதிப்படுத் தியுள்ளன. எனவே இஸ்லாமியக் கல்வி என்பது அல்-குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டலில் இறைவனுக்கு மட்டும் அடிபணியும், நாம் இறைவனின் பிரதிநிதி (கலிபா) என்ற அடிப்படையில் நிறுவப்பட வேண்டும்.

இக்கல்விக் கூடங்களில் காணப்படும் ஒழுக்க சீர்கேடு, பாலியல் துஷ்பிரயோகம் சமய நம்பிக்கையின்மை, கலாசார பாதிப்புகளைப் பற்றி அவர்கள் அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று எமது பிள்ளைகள் எதிர்நோக்கம் பாடசாலை சவால்களாவன

1. குற்றம், துப்பாக்கி, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்கள்
2. போதைப் பொருள் பாவனையும் தடை செய்யப்பட்ட ஆண் பெண் உறவுகளும்
3. ஓரினச் சேர்க்கை
4. வறுமை
5. விவாகரத்து
6. குடும்ப பிளவுகளும், ஒரு பெற்றோர் குடும்பமும்
7. இளம்வயது கர்ப்பம் தரித்தல்
8. பாலியல் துஷ்பிரயோகம்
9. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்

எனவே ஒவ்வொரு இஸ்லாமிய பெற்றோரும் தமது பிள்ளைகளின் ஒளிமயமான எதிர் காலத்துக்காகவும், இஸ்லாமிய இலட்சியத்துடனான அவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பின் வரும் விடயங்களை கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. அதிகாலையில் சுபஹுத் தொழுகையோடு கண்விழித்து பிள்ளைகளைத் தொழப் பழக்குதல்.

2. செளகரியமான சந்தோஷமான குடும்ப வாழ்வுக்கு முயலல்.

3. பிள்ளைகளுக்கு வேண்டிய சகல வசதிகளையும், வாழ்க்கை அமைப்பையும் செய்து கொடுத்தல்.

4. நல்ல கல்வியை ஊட்டுதல்

5. தினமும் பிள்ளைகளோடு சேர்ந்து குர்ஆனை ஓதுதல், அவர்களோடு அதிகமாக காலத்தை செலவிடல்.

6. சிறந்த இஸ்லாமிய வழிகாட்டல் அமைந்த இலக்ரோனிக் சாதனங் களை ஏற்படுத்தி அவற்றை கண் காணித்தல்.

7. இஸ்லாமிய உரைகளை, நிகழ்ச் சியை பார்க்கும், கேட்கும் வசதிகளை செய்து கொடுத்தல்.

இவ்வாறான பல முயற்சிகளை இங்குள்ள பெற்றோர்கள் உடனடியாக மேற்கொள்ளாவிடில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதே. நீங்களும் இறைவனிடத்தில் மறுமையில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நன்றி : தாவா வேர்ல்ட்

No comments:

Post a Comment