இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, June 30, 2011

+2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு நானோ கார் பரிசு!

ஓசூர்: மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகாவுக்கு பள்ளி நிர்வாகம் நானோ கார் வழங்கியது. மூன்றாம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில் 1200 க்கு 1190 மதிப்பெண்கள் பெற்று கே.ரேகா முதலிடம் பிடித்தார். மேலும் அதே பள்ளி மாணவி பி.எஸ்.ரேகா 1200 க்கு 1186 பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தார். இந்த மாணவிகளை கெளிரவிக்கும் வகையில் ஒசூர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி தாளாளர்கள் மணிவண்ணன் மற்றும் செல்வி மணிவண்ணன் ஆகியோர் பள்ளி நிர்வாகம் சார்பில் முதல் மாணவி கே.ரேகாவுக்கு நானோ காரையும், 3 ம் இடம் பிடித்த மாணவி பி.எஸ்.ரேகாவுக்கு மொபெட்டும் வழங்கி கெளிரவித்தனர்.

மேலும் பிளஸ் 2 வகுப்பில் பாடம் நடத்திய 8 ஆசிரியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமை ஆசிரியர் சம்பத்குமாருக்கு சொகுசு கார் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment