இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Thursday, June 23, 2011

காஸ் இணைப்பு பெற "ஆதார்" எண் கடிதம்

"புதிய காஸ் இணைப்பு பெறுவதற்கு, இந்திய அரசு தனி நபர்களுக்கு வழங்கும், "ஆதார்' எண் ஒதுக்கீடு மற்றும் முகவரிக்கான கடிதத்தை, அடையாள ஆதாரமாக இணைக்கலாம்' என, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.

இது குறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசு தனி நபர் அடையாளத்துக்காக, ஒவ்வொரு தனி அடையாள வழங்கும் பணியை துவக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, "ஆதார்' எண் ஒதுக்கியதற்கான கடிதம் வழங்கப்படுகிறது. முகவரி, புகைப்படம் ஆகியவையும் அந்த கடிதத்தில் இடம் பெறும். புதிய காஸ் இணைப்பு பெறுவதற்கு, தனி நபர் அடையாளத்துக்காக அளிக்கப்படும் சான்றுகளுடன், "ஆதார்' எண் ஒதுக்கீட்டு கடிதத்தையும் ஆதாரமாக இணைக்கலாம்.

பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவை தங்கள் முகவர்களுக்கு, புதிய காஸ் இணைப்பு வழங்க, "ஆதார்' எண் கடிதத்தையும் ஒரு சான்றாக இணைத்து கொள்ளும்படி அறிவுரை அனுப்பியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment