பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.
டெல்லியில் தனியார் நிறுவனம் சார்பாக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டார். இந்த விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பிரதீபா பாட்டீல்,
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. வெற்றி பாதையில் வீர நடை பயில ஆண்களோடு போட்டி போடாமல் கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் நிலவி வரும் பெண்களுக்கு எதிரான தவறான பார்வையை மாற்ற சமூக இயக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். பெண்கள் குறித்து சமுதாயத்தில் நிலவி வரும் தவறான பார்வையை மாற்ற சமூக இயக்கங்கள் அதிக அளவில் உருவாக வேண்டும். அதற்கு பெண்களே அதிகளவில் முயற்சிக்க வேண்டும் என்றார்.
THANKS : NAKKEERAN
THANKS : NAKKEERAN
No comments:
Post a Comment