இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Sunday, July 17, 2011

இந்தியா கோரிக்கை: சவுதி அரேபியா ஏற்பு

ஹஜ் யாத்திரை பயணிகள் அதிகரிப்பு தொடர்பாக இந்தியாவின் கோரிக்கையை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டுள்ளது.இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பயணிகள் அதிகரிப்பு தொடர்பாக இந்தியா சவுதி அரேபியாவிடம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கையை சவுதி அரேபியா அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா அரசிற்கும் இந்தியா தரப்பில் ஹஜ் கமிட்டியை சேர்ந்த 4 தூதர்கள் இடையே ஜூலை 19 ஆம் தேதி மதினாவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய ஹஜ் கமிட்டி தலைமை சி.இ.ஓ.,வாக அபூபக்கர், ஜாஹீர் உசைன், ஹசன் அஹ்மத் மற்றும் மம் மொகம்மத் மதானி ஆகியோர் இருப்பர். இதன் விளைவாக இந்திய பயணிகள் இடஒதுக்கீடு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment