என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் முதல் இடத்தை பிடித்த மாணவர் அசோக்குமார். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை மணிவாசகம் கூலித்தொழிலாளி. இறந்து விட்டார். தாய் முருகேஸ்வரி கூலிவேலை பார்த்து படிக்க வைக்கிறார்.
தமிழ் வழியில் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார். இவரது திறமையை பார்த்து ஈரோடு தாமரை மெட்ரிக்குலேசன் பள்ளி, பிளஸ்-2வை இலவசமாக கற்றுக் கொடுத்தது.
பிளஸ்-2 தேர்வில் 1175 மதிப்பெண்கள் பெற்றார். இயற்பியல், வேதியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200 மதிப்பெண்கள் பெற்றார். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்றார். மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்ததில் 2 மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால் கம்ப்யூட்டர் சயின்சிலும் 200 மதிப்பெண் பெற்றார்.
இதன் மூலம் தரவரிசையில் 37-வது இடத்தில் இருந்த அசோக்குமார் முதல் இடத்தை பிடித்தார். இன்று கவுன்சிலிங்கிற்கு அசோக்குமார் அவரது அண்ணன் சதீஷ்குமாருடன் வந்திருந்தார். முதல் இடத்தை பிடித்தது பற்றி அசோக்குமார் கூறியதாவது:-
நான் தமிழ் வழியில்தான் பிளஸ்-2 வரை படித்தேன். முதல் இடத்தை பிடித்தது சந்தோசமாக உள்ளது. எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் சயின்ஸ் பாடப்பிரிவை எடுத்துள்ளேன். அப்துல்கலாம் போல் பெரிய விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே என் ஆசை என்றார்.
No comments:
Post a Comment