இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Friday, September 16, 2011

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாசிச வெரி பிடித்த பிஜேபி யுடன் கூட்டணி?

வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து,  அகமதாபாத்தில் 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர்  மாமிசம் தின்னும் மிருகம் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதில் வருத்தப்படவோ வேதனை படவோ அவசியம் இல்லை இது எல்லோராலும் எதிர்பாக்க பட்ட ஒன்றுதான், பதினைந்து வருடத்திற்கு முன்பு ஒன்றினைந்த தா மு மு க மாநாட்டில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தது தவறு என்று கூறி அடுத்த தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்ததை யாரும் மறந்து விட முடியாது.
 
அதிமுக சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.

அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த உண்ணாவிரதத்தை அறிவித்தார் மோடி.

நாளை முதல் இந்த உண்ணாவிரதம் தொடங்கவுள்ளது. இந் நிலையில் இந்த உண்ணாவிரதத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்து ஜெயலலிதாவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

No comments:

Post a Comment