இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, October 15, 2011

உள்ளாட்சிக்கான தேர்தலா ?ஊழலாட்சிக்கான தேர்தலா ?முடிவு உங்கள் கையில்.

சாதாரணமான மக்களும் வியக்கும் வண்ணம் இப்போதுள்ள உள்ளாட்சி தேர்தல்கள்  மாறி வருகின்றது.ஏனென்றால் அந்த அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு வேட்ப்புமனு தாக்கல் செய்யபட்டுள்ளன.

ஒரு நேரத்தில் உள்ளாட்சி  தேர்தலில் ஊரில் உள்ள மக்களில் சற்று பிரபலமானவர் போட்டி இடுவார் ஆனால் இன்றோ பெரிய பெரிய அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தி வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றது.அதற்க்கு காரணம் உள்ளாட்சிகளில் நிறைவேற்ற படும்  திட்டங்களுக்கு நிதிகளின் தொகை அதிகமாக ஒதுக்கபடுவதே காரணம்.பஞ்சாயத் ராஜ் திட்டம் மூலம் கோடிகணக்கான பணம் மதிய அரசால் ஒதுக்கபடுகின்றன.அதற்கு என்ன அது தெரிந்ததுதானே என்று சிலர் நினைக்கலாம். தெரியாத விசயங்கள் உள்ளது ஊரில் நிறைவேற்றப்படும் திட்டங்களை செயல்படுத்தும் காண்ட்ராக்டர்கள் மூலம் தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு கமிசனாக(லஞ்சமாக) 4 சதவிகிதம் அதிகமாக வழங்கபடுகிறது. அட போங்க சார் இது நம்ம இந்தியால என்ன பெரிய  விசயமா ?என்று கேக்கலாம் தேசிய அளவில் நடக்கும் ஊழல்கள்  நம்மை எந்த அளவில் பாதிகின்றன என்பதை நாம் இன்னும் உணராமல் இல்லை (விலைவாசி உயர்வு,பெட்ரோல்,கேஸ்,போன்றவைகளின்விலை உயர்வு)நேரடியாகவே பாதிகின்றன.உள்ளாட்சிகளில் நடக்கும் ஊழல்கள் நமது ஊரில் நடக்கும் திட்டங்களில் தரமின்மையாலும்,பஞ்சாயத்துகளில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளினாலும் பாமரனும் பாதிக்கபடுகிறான்.

கிராம நிர்வாக அலுவலரில் இருந்து தாசில்தார் வரை லஞ்சம் அளித்தால்தான் நமக்கு தேவையான ஆவணங்களை  பெற முடியும்.இப்படி லஞ்சம் புரையோடி உள்ள நாட்டில் யாரு என்னதான் செய்ய முடியும் என்று நினைத்து நாமும் பழகி விட்டோம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் கண்டிப்பாக ஒரு ஊழலற்ற MLA வையோ MP யைய்யோ  நம்மால் தேர்ந்தெடுக்க  முடியாது என்பது நிதர்சனம்.ஆனால் கண்டிப்பாக ஒரு வார்டு கவுன்சிலரை,பஞ்சாயத் தலைவரை,நகராட்சி தலைவரை, உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடும் கிராம புற வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க முடியும் இதில் கண்டிப்பாக அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற நிர்வாகத்தை தரமாட்டார்கள் அப்படியே அவர்கள் நல்லவர்களாக  இருந்தாலும் அவர்கள் சார்ந்துள்ள கட்சியினர் அவர்களை நல்லவர்களாக் இருக்கவிடுவதில்லை.அதனால் இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டி இடுபவர்களிலும்  அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை முறையை பார்த்து தேர்ந்தெடுப்பதே நல்லது

யார் ஒருவர் பதவி ஆசை இல்லாமல் பொது சேவைகளை பெருமைக்கு செய்யாமல்,தானா தர்மங்களை பிறர் காண செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களை போன்றவர்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் ஆகவே தங்களுடைய குடும்பத்தினரின்  பொன்னான வாக்குகளை மேற்கண்டவிசயங்களை சிந்தித்து இந்த  செய்தியை படிக்கும் நண்பர்கள்  தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என நமது  ஊரின்,மாவட்டத்தின், நாட்டின்  நலன் கருதி ஒரு ஊழலற்ற பஞ்சாயத்து,நகராட்சி,மாநகராட்சி  ( தலைவரை) வார்டு உறுப்பினர்களை,கவுன்சிலர்களை ,மேயர்களை தேர்ந்தெடுக்க  வேண்டும் என்றுகேட்டுக்கொள்கிறேன்.
 
THANKS : முகைதீன்

No comments:

Post a Comment