இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Tuesday, August 27, 2013

பாதிக்கப்பட்ட பெண்ணே மன்னித்தாலும் கற்பழிப்பு குற்றவாளிகளை சும்மாவிடக் கூடாது: சுப்ரீம் கோர்ட்

டெல்லி: கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே குற்றவாளி அல்லது குற்றவாளிகளை மன்னித்தாலும் அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிற நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 
 
இது குறித்து தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் கூறுகையில், கற்பழிப்பு என்பது சமூகத்திற்கு எதிரான குற்றம் ஆகும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. குற்றவாளி தான் கெடுத்த பெண்ணை திருமணம் செய்ய முன் வந்தாலும் அவரின் தண்டனையை குறைக்கக் கூடாது. மும்பையில் பத்திரிக்கை புகைப்படக்கார பெண் கற்பழிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 
 
கற்பழிப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே அந்த குற்றவாளியை மன்னித்தாலும் அவருக்கான தண்டனை குறைக்கக் கூடாது. கற்பழிப்பு வழக்குகளில் பிற நீதிமன்றங்கள் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

THANKS : THATSTAMIL

No comments:

Post a Comment