சீனாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் ”சன்வே ப்ளூ லைட்” அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீன தயாரிப்பான இந்த சூப்பர் கம்ப்யூட்டர், ஆயிரம் டிரில்லியன் கணக்குகளை ஒரு நொடியில் போடும் வல்லமை கொண்டது.
கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சீன நாட்டின் கிழக்கு நகரமான ஜியானில் நிறுவப்பட்ட இந்த சூப்பர் கம்ப்யூட்டர், 3 மாத சோதனைக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தால் இந்த சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
கடல் பயன்பாடு, உயிர் மருந்தகம், தொழில்துறை வடிவமைப்பு, நிதி ஆகிய துறைகளில் இந்த சூப்பர் கம்ப்யூட்டரை பயன்படுத்த முடியும் என்று செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment