இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Saturday, December 10, 2011

உத்தேச அட்டவணை வெளியீடு: பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடக்கம்

பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி முடிவடைகிறது. இதற்கான உத்தேச அட்டவணை அரசின் ஒப்புதலுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுத் துறை வெளியிடுவதற்கு முன்பாக உத்தேசமான அட்டவணையை அரசின் ஒப்புதலுக்கு தயாரித்து அனுப்புவது வழக்கம்.
 
அந்த வகையில் பிளஸ்-2 தேர்வுக்கான உத்தேச தேர்வு அட்டவணையை தற்போது அனுப்பியுள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம்
2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. 7 லட்சத்து
63 ஆயிரத்து 124 மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு தேர்வு எழுத உள்ளனர். கடந்த வர டத்தை காட்டிலும் 39,579 பேர் கூடுதலாக தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஒவ்வொரு தேர்விற்கும் 2 நாட்கள் இடைவெளி விட்டு தேர்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் படித்து அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுத்துறை இந்த இடைவெளியை கொடுத்துள்ளது. 0.25 கட்- ஆப் மார்க்கில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என்பதால் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 2 நாட்கள் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது.
 
தேர்வுத்துறை தயாரிக்கும் உத்தேச கால அட்டவணையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அதே அட்டவணையை வெளியிட அரசு முடிவு செய்யும். அதனால் இந்த உத்தேச அட்டவணைக்கு ஒப்புதல் அளித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
 
THANKS : MAALAIMALAR

No comments:

Post a Comment