இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக ''திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள்''

Monday, February 28, 2011

தற்பெருமை...

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவனுடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்குமோ, அவன் சுவனத்தில் நுழைய முடியாது.” இதனைச் செவியுற்ற ஒரு மனிதர் கேட்டார்: “மனிதன் தன் ஆடைகளும் காலணியும் நன்றாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றானே? (இதுவும் தற்பெருமையா? இத்தகைய அழகுணர்ச்சி கொண்ட மனிதன் சுவனப்பேற்றை அடைய முடியாதா?” அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “(இல்லை, இது தற்பெருமையில்லை) அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையையே விரும்புகின்றான். தற்பெருமையின் பொருள், அல்லாஹ்விற்கு நாம் அடிபணிந்து வாழவேண்டிய கடமையை நிறைவேற்றாமலிருப்பதும், பிற மக்களை இழிவாகக் கருதுவதும் ஆகும்.”

அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (முஸ்லிம்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “பெருமையடிப்பவன் சுவனத்தில் நுழையமாட்டான். பொய்ப் பெருமை பேசித் திரிபவனும் சுவனத்தில் நுழையமாட்டான். ”

அறிவிப்பாளர் : ஹாரிஸ் பின் வஹ்ப் (ரலி) (அபூதாவூத்)

நான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: “இறை நம்பிக்கையாளனின் வேட்டி (கீழங்கி, கால்சட்டை) அவனது கெண்டைக்காலில் பாதிவரை இருக்கும். அதனைவிடக் கீழேயும் கணுக்கால்களுக்கு மேலேயும் இருந்தால் அதனால் பாவம் ஏதுமில்லை. இன்னும் அதனைவிடக் கீழே இருப்பது நரகத்திற்குரியதாகும். (அதாவது அது பாவகரமான ஒரு செயல்) இதனை (இந்தக் கடைசி வாக்கியத்தை மக்களுக்கு இதன் முக்கியத்துவமும் தெளிவாகிவிடட்டும் என்பதற்காக) அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். பிறகு “அகந்தையுணர்வினால் தன் கீழங்கியைப் பூமியில் இழுத்தவண்ணம் நடக்கும் மனிதனை இறைவன் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான் ”என்று அண்ணலார் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரி (ரலி) (அபூதாவூத்)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: “எவன் தன் கால்சட்டையை கர்வத்துடன் பூமியில் இழுத்துச் செல்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். ( கருணைப் பார்வை பார்க்கமாட்டான் )”

அறிவிப்பாளர்: இப்னு உமர்

“நான் பிடித்து வைத்த வண்ணம் இருக்காவிட்டால் என் வேட்டி தளர்ந்து கணுக்கால்களுக்குக் கீழே போய்விடுகின்றது. (நானும் என் இறைவனின் கருணைப் பார்வையை இழந்து விடுவேனா? ” அதற்கு அண்ணலார், “இல்லை, நீர் கர்வத்தால் வேட்டியை இழுத்துச் செல்பவரல்லர். என்று பதிலளித்தார்கள்.

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்கள் வினவினார்கள் (புகாரி)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள், விரும்புவதை அணியுங்கள். ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக்கூடாது.”

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (புகாரி)

THANKS : ABDUL HAKEEM

Sunday, February 27, 2011

பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!

மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் நாளில் பெண்களை கவுரவப்படுத்தும் வகையிலும் பொது விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா பெண்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

மார்ச் 8ஆம் தேதி ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் எகானமி வகுப்பில் 99 ரூபாய் கட்டணத்தில் பெண்கள் பயணயம் செய்யலாம். வணிக வகுப்புக் கட்டணம் 1,199 ரூபாய்கள். விமான நிலைய வரி மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும்.

இந்தக் கட்டணத்தில் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதற்கான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

நன்றி : இந்நேரம்.காம்

Saturday, February 26, 2011

நாளை 27/02/2011 போலியோ சொட்டு மருந்து வழ‌ங்க‌ப்படு‌கிறது.

70 லட்சமகுழந்தைகளுக்கஇரண்டாமதவணையாக நாளை போலியசொட்டமருந்து வழ‌ங்க‌ப்படு‌கிறது.


சென்ற முகாம் போலவே ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனை, பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் 40,399 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


முகாமநாளன்றபயணமமேற்கொள்ளுமகுழந்தைகளுக்கசொட்டுமருந்தவழங்குவதற்காபேரு‌ந்தநிலையம், இரயிலநிலையம், சுற்றுலதலங்களில் 2400 டிரான்ஸிடமையங்களநிறுவப்பட்டுள்ளன.


மேலுமதொலைதூபகுதியிலவாழுமகுழந்தைகளுக்காசொட்டுமருந்தவழங்குமபணியில் 980 நடமாடுமகுழுக்களஈடுபடுகிறார்கள்.


பல்வேறஅரசுத்துறைகள் , ரோட்டரி, லயன்ஸ்கிளபமுதலாதன்னார்தொண்டநிறுவனங்களைசசார்ந்சுமார் 2 இலட்சமபணியாளர்களஇந்முகாமிலஈடுபடுகிறார்கள்.

தமிழகத்திலஇடமபெயர்ந்தவா‌ழ்வோரகுழந்தைகள், இலங்கஅகதிகளகுழந்தைகளகணக்கஎடுக்கப்பட்டு, 35,000 குழந்தைகளுக்கமுதலசுற்றிலபோலியசொட்டமருந்தவழங்கப்பட்டது. இந்முகாமமூலமஅவர்களஅனைவருக்குமமீண்டுமசொட்டமருந்து வழங்கப்படும்.

THANKS : YAHOO NEWS.

Thursday, February 24, 2011

மூட்டு வலி....

மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் வயதானவர்களிலே முழங்கால் மூட்டு போன்ற பெரிய மூட்டுகளிலே ஏற்படுகின்ற வலி பொதுவாக ஒஸ்டியோ ஆர்த்திரைட்டிசினாலேயே ஏற்படுகிறது(Osteo arthritis).

(சிறிய மூட்டுக்களிலும் இது ஏற்படலாம்) இது பொதுவாக ஒன்று அல்லது இரண்டு மூட்டுக்களையே தாக்கும்.இரண்டுக்கு மேற்பட்ட மூட்டுகளில் வலி ஏற்பட்டால் அது வேறு வகையான நோயாக இருக்க சந்தர்ப்பம் அதிகம்.

இந்த நோய் மூட்டுகளில் எழும்புகள் தேய்வதாலும் ,எழும்பைச் சுற்றி உள்ள சில மென்சவ்வுகள் பாதிக்கப்படுவதாலும் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள்... மூட்டு வலி , மூட்டு இறுக்கமான நிலை , சிலவேளைகளில் சிறிதளவான வீக்கம். சில வேளைகளில் மூட்டினுள்ளே சிறிதளவான நீர் தேங்கலாம்.

சில நபர்களில் கொர கொர என்ற சதம் ஏற்படும்.(மூட்டை அசைக்கும் போது) இதற்கு மருந்தாக பரசிட்டமோல் போன்ற வலி நிவாரணிகளை பாவிக்கலாம். அத்தோடு வீரியம் கூடியவலி நிவாரணிகளை நோய் ஏற்பட்ட மூட்டின் மேல் பூச்சாக பயன்படுத்தலாம்.

பரசிட்டமோல் தவிர்ந்த மற்ற நோய் நிவாரணிகளை தொடர்ச்சியா வாய் வழியாக உள்ளெடுப்பது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் முக்கியமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.

வலி நிவாரணிகள் தவிர மூட்டிற்கு செலுத்தப்படும் விசையை குறைப்பதற்கு விசேடமாகத் தயாரிக்கப்பட்ட சொக்ஸ் போன்றவற்றையும் பாவிக்கலாம்.

நடப்பதில் சிரமம் உள்ளவர்கள் கைத்தடி பாவிக்கலாம். கைத்தடி பாதிக்கப்பட்ட பக்கத்திற்கு எதிர்ப்பகத்திலேயே பாவிக்கப்படவேண்டும். உடற் பருமனானவர்கள் உடல் நிறையைக் குறைப்பது கட்டாயம்.

இல்லாவிடில் இந்த நோயின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே போகும். மூட்டு வலி ஏற்பட்டவர்கள் எப்போது உடனடியாக வைத்தியரை நாட வேண்டும்? இரண்டுக்கு மேற்பட்ட மூட்டுகளில் வலிஎற்படுதல் மூட்டு வலியோடு காய்ச்சல் ஏற்படுதல் மூட்டுகள் அதிகமாக வீங்குவதுடன் சூடாக இருத்தல் மூட்டு வலியோடு பசிக்குறைவு/உடல் மெலிதல் போன்றவை.

THANKS : TAMILCNN

Wednesday, February 23, 2011

சுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

1. 
அநாதையைப் பொறுப்பேற்றல்:
"
அநாதையைப் பொறுப்பேற்றவரும்நானும் சுவர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் தனது ஆள்காட்டி விரலையும்நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்" (புஹாரி).

2. 
கடமையான தொழுகைக்குப் பின் ஆயத்துல் குர்ஸி ஓதி வருதல்:
"
எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸியை'ஓதி வருவாரோ மரணத்தைத் தவிர அவருக்கு சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நஸாஈ).
 

ஆயத்துல் குர்ஸி:

"
அல்லாஹூ லாஇலாஹ இல்லா ஹூவல் ஹய்யுல் கய்யூம் லா தஃஹுதுஹு ஸினத்துவ்வலா நவ்ம் லஹு மாபிஃஸ் ஸமாவாதி வமாபில் அர்லி மன்தல்லதி யஷ்பஃஉ இன்தஹு இல்லா பி இத்னிஹி யஃலமு மாபயின அய்தீஹிம் வமா கல்பஹும் வலா யுஹீதூன பிஷய்இம்மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாதி வல்அர்ல வலா யஊதுஹு ஹிப்லுஹுமா வஹுவல் அலிய்யுல் அழீம" (பகரா 2:255).
اللَّهُ لا إِلَهَ إِلا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لا تَأْخُذُهُ سِنَةٌ وَلا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأرْضَ وَلا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்கு சிறு உறக்கமஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாதுஅவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும்பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று அவன் உயர்ந்தவன்மகத்துவமிக்கவன்.

3. 
வுழூச் செய்த பின் ஓதவேண்டியவை:
'உங்களில் ஒருவர் அழகான முறையில் வுழூச் செய்து பின்பு:
أشهد أن لا اله الاالله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله
'
அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு' (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லைஅவன் தனித்தவன்அவனுக்கு எந்த இணையுமில்லை என்றும்முஹம்மத் அல்லாஹ்வின் அடியாரென்றும் தூதரென்றும் சான்று பகருகிறேன்) என்று சொல்வாரானால் அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படுகின்றன. அவர் விரும்பிய வாயிலால் நுழைய முடியும்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

4. 
அஸர் தொழுகையையும் சுபஹ் தொழுகையையும் தொடர்ச்சியாக தொழுது வருதல்:
'எவர் அஸர் தொழுகையையும்சுபஹ் தொழுகையையும் (பேணிப் பாதுகாத்து) தொழுது வருவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரிமுஸ்லிம்)

5. 
ஐவேளை தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருதல்:
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்அபூதாவூத்நஸாஈ).

6. 
ஸலாத்தை பரப்புதல்:
"உங்களில் எவரும் நம்பிக்கை கொள்ளாத வரைசுவர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை விசுவாசம் கொண்டவராகக் கருதப்பட மாட்டீர். உங்களுக்கு மத்தியில் நேசத்தை ஏற்படுத்தும் ஒரு காரியத்தை சொல்லித் தரட்டுமாஉங்களுக்கு மத்தியில் ஸலாத்தை அதிகமாகப் பரப்புங்கள்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

7. 
வுழூச் செய்த பின் இரண்டு ரக்அத் மனப்பூர்வமாகத் தொழுதல்:
'ஒரு முஸ்லிம் அழகான முறையில் வுழூச் செய்து உளப் பூர்வமாக இரண்டு ரக்அத் தொழுவாரானால் அவருக்கு சுவர்க்கம் கடமையாகி விட்டதுஎன நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

8. 
கல்வியைத் தேடல்:
"எவர் கல்வியைத் தேடி வெளியேறிச் செல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தின் பாதையை இலகு படுத்துகிறான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9. 
பெற்றோருக்கு நன்மை செய்தல்:
அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும்பின்பு அவனது மூக்கு மண்ணை கவ்வட்டும். இறைத் தூதரிடம் அவர் யார் எனக் கேட்கப்பட்டது? "பெற்றோர்களின் இருவரையோ அவர்களின் ஒருவரையோ முதிய வயதில் அடைந்துபின்பு அவன் (அவர்கள் மூலம்) சுவர்க்கம் நுழையவில்லையானால் அவனேயாவான்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

10. 
நாவையும்மர்மப் பகுதியையும் பேணுதல்:
"எவர் இரு தாடைகளுக்கும்தொடைகளுக்கும் மத்தியில் உள்ளதை பாதுகாக்கிறேன் என பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு நான் சுவர்க்கத்தை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

11. 
முஅத்தீனின் அழைப்புக்கு மறுமொழி பகருதல்:
"முஅத்தீன் (அழைப்பாளர்) பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர் அதே போன்று சொல்ல் வேண்டும், 'ஹய்யஅலஸ் ஸலாஹ்ஹய்யஅலல் பலாஹ்என்று சொல்லும் போது மாத்திரம் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹிஎன்று சொல்ல வேண்டும்பின்பு முஅத்தீன் 'லா இலாஹ இல்லல்லாஹ்'என்று சொல்லும் போது யார் தூய உள்ளத்துடன் 'லா இலாஹ இல்லல்லாஹ்என்று பதில் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

12. 
ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருதல்:
"எவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத் ஸுன்னத் தொழுது வருவாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகிறான். அவைகளாவன: லுஹருக்கு முன் 4ரக்அத்துகள்லுஹருக்குப் பின் 2 ரக்அத்துகள்மஃரிபுக்குப் பின் 2ரக்அத்துகள்இஷாவுக்குப்பின் 2 ரக்அத்துகள்பஜ்ருக்கு முன் 2ரக்அத்துகள்". (திர்மிதி)

13. 
அல்லாஹ்வின் 99 திருநாமங்களை மனனமிட்டு அதன்படி செயல்படுதல்:
"அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன. எவர் அவைகளை மனனமிட்டு அதன்படி செயல்படுவாரோ அவர் சுவர்க்கம் நுழைந்துவிட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

14. 
நான்கு விடயங்கள் ஒரு சேர பெற்று விட்டவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்:
"உங்களில் இன்று நோன்பு நோற்றவர் யார்என நபி (ஸல்) அவர்கள் குழுமியிருந்த தனது தோழர்களிடம் வினவினார். அபூபக்ர் (ரலி) அவர்கள் அதற்கு நான் என்றார்கள். இன்று உங்களில் நோயாளியை சுகம் விசாரிக்க சென்றது யார்என அன்னார் வினவினார்அதற்கும் நான் என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்என அன்னார் கேட்டபோதுஅதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். இன்று உங்களில் ஏழைகளுக்கு உணவளித்தவர் யார்என அன்னார் கேட்டார்அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் நான் என்றார்கள். எவருக்கு மேற் கூறப்பட்ட இவ்விடயங்கள் ஒரே நாளில் ஒரு சேர கிடைத்துவிடுமோ அவர் சுவர்க்கத்தில் நுழைந்து விடுவார்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

15. 
இணைகற்பிக்காத நிலையில் மரணித்தால் சுவர்க்கம்:
"முஆதே! எவர் அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காத நிலையில் மரணிக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

16."
லா இலாஹ இல்லல்லாஹ்வை உளத்தூய்மையுடன் மொழிதல்:
"எவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை என்பதை உளத்தூய்மையுடன் சொல்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

17. 
எழுபதாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் நுழைவர்:
"நபி (ஸல்) அவர்கள்: எனது சமுதாயத்தில் எழுபதாயிரம் பேர் எந்த விசாரணையும்தண்டனையுமின்றி சுவர்க்கம் நுழைவார்கள் எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள். அங்கிருந்தோர் தங்களுக்குள் அந்த எழுபதாயிரம் பேர் நபியோடு தோழமை கொண்டு இருந்தவர்கள்மற்றும் சிலர் இல்லை அவர்கள் இஸ்லாத்தில் பிறந்து அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் இணையாக்காதவர்கள். வீட்டைவிட்டு வெளியில் வந்த நபி (ஸல்) அவர்கள் நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் எனக் கேட்க நடந்தவைகளைக் கூறினர். நபி (ஸல்) அவர்கள் அந்த எழுபதாயிரம் பேர்:
மந்திரித்துப் பார்க்காதவர்கள்மந்திரித்துப் பார்க்குமாறு கோராதவர்கள்பறவை சாஸ்த்திரம் பார்க்காதவர்கள் முழுமையாக அல்லாஹ்வையே சார்ந்திருக்கக் கூடியவர்கள் எனக் கூறினார்கள். அங்கிருந்த ஒருவர் எழுந்து நபியே நானும் அவர்களுடன் இருக்க பிரார்த்தியுங்கள்நீரும் அவர்களுடன் இருப்பீர் எனக் கூறினார்கள். மற்றொருவர் எழுந்து தனக்கும் பிரார்த்திக்குமாறு வேண்டினார்அதற்கு நபியவர்கள் "உக்காஷா"உம்மை முந்திவிட்டார் எனக்கூறினார்கள். (முஸ்லிம்).

"
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன. அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்" (குர்ஆன் 8:107,108). 
__
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”

தேனின் சிறப்பு!

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது.

அதனால் இதய நோய் இதயத்தில் நுழைய பயப்படும். எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள்.

ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு தே‌க்கர‌ண்டி முதல் மூன்று தே‌க்கர‌ண்டி வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள்.

குழந்தை முதல் வயதானோர் வரை தேனை உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.

THANKS : TAMILCNN

மலட்டுத் தன்மைக்கு புகைப்பிடித்தலும் ஒரு காரணம்

குழந்தைப் பேறு மருத்துவ அறிவியலில், மனைவிக்கு குழந்தைப் பேறு அளிப்பதில் கணவனின் விந்தணுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

புகை பிடித்தல், மதுப் பழக்கம், அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி, மன உளைச்சல் தரும் வேலைகள், உடல் பருமன், போதைப் பொருள்களை பயன்படுத்துதல் ஆகியவை காரணமாக விந்தணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதனால் மலட்டுத்தன்மை உண்டாகிறது.மேலும் எப்போதும் பதற்றத்தோடு வேலை செய்யும் ஆண்களுக்கு, உயிர் அணுக்கள் மிகக் குறைவாக ஆற்றல் குறைவுடன் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் வாகனம் ஓட்டுதல், ரசாயன ஆலைகளில் பணிபுரிதல் உள்ளிட்ட தொழில்சார்ந்த பிரச்னைகள் காரணமாகவும் ஆண் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உண்டு.மேலே குறிப்பிட்ட காரணிகளுள், புகைப் பழக்கம் காரணமாக குழந்தைப் பேறு இல்லாமை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக புகைப் பழக்கம் காரணமாக பெரும்பாலானோருக்கு ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. குழந்தைப் பேறின்மை சிகிச்சை எடுக்க ஆரம்பித்தவுடன், புகைப் பழக்கத்தை கைவிடுவது அவசியம். இல்லையெனில் சிகிச்சை பலன் தராது.

திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்தும் குழந்தைப் பேறு இல்லாத நிலையில், எந்தவிதத் தயக்கமும் இன்றி மனைவியுடன் கணவன் பரிசோதனைக்கு வருவது அவசியம்.

பிறவிக் குறைபாடு இல்லாத நிலையில், மற்ற குறைகளை மருத்துவ ரீதியாக சரி செய்து குழந்தைப் பேறு அளிக்கும் அளவுக்கு குழந்தைப் பேறு மருத்துவ அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியர் கவலைப்பட வேண்டாம்.

THANKS : TAMILCNN

Monday, February 21, 2011

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க விரைவில் புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் ஆற்றிய உரை மூலமாக, மத்திய அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது.


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்காக கொண்டுவரப்படும் இந்த புதிய சட்டம், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து பாலியல் கொடுமைகளையும் உள்ளடக்கியதாக மற்றும் கடுமையான தண்டனை அளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அதில் மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.


இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தொடர்பான இதர சட்டத்தை விட இப்புதிய சட்டத்தின் கீழே வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

THANKS-YAHOO NEWS.

Saturday, February 19, 2011

பாஸ்ட்புட் உணவு: குழந்தைகளை நோய் தாக்கும் ஆபாயம்

அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழுமையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழக்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவுவகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர்.
 
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
 
குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியிலான நீரளிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எழு ப்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
 
 மேலும் குந்தைகளிடம் நடத்தப்பட்ட 60க்கும் மேற்பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
 
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உணவு உண்பதில்லை. என்றும் வெஜிடபிள் உணவு வகைகளை தவிர்பதால் இரண்டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீசியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ்டன் தெரிவித்துள்ளார்.  
 
மருத்துவர்கள் பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். 
 
THANKS : MAALAIMALAR

இன்னும் 25ஆண்டுகளில் கார் விற்பனையில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும்

நியூயார்க்: இன்னும் 25 ஆண்டுகளில் அமெரிக்கா,சீனாவை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியா முன்னிலை பெறும் என அமெரிக்க நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க கார் விற்பனை சந்தை உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.இதற்கடுத்து,பொருளாதாரத்தில் புதிய வல்லரசாக மாறியுள்ள சீனாவின் கார் விற்பனை சந்தையும் அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது.

இதைத்தொடர்ந்து,இந்தியாவின் கார் விற்பனை சந்தையும் உலகின் முக்கிய சந்தைகளில் ஒன்றாக மாறியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக கார் விற்பனையில் கொடிகட்டி பறந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.

இந்திய கார் சந்தையின் அசுர வளர்ச்சி தொடர்ந்தால்,இன்னும் 25 ஆண்டுகளில் கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா,சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி சாதனை படைக்கும் என அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூஸ் அண்ட் ஆம்ப் கன்சல்ட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

"கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் கார் உற்பத்தி கணிசமாக அதிகரித்து வருகிறது.இன்னும் சில ஆண்டுகளில் கார் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று,கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் உள்நாட்டு கார் விற்பனை மற்றும் ஏற்றுமதியை வைத்து பார்க்கும்போது, 2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த கார் விற்பனை ஆண்டுக்கு 5மில்லியன் கார்கள் என்ற இலக்கை எட்டும்என்று தெரிகிறது.

இது அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 மில்லியன் கார்கள் என்ற இலக்கை அடையும்போது,அமெரிக்கா மற்றும் சீனாவை பின்னுக்குத் தள்ளி கார் விற்பனையில் இந்தியா முன்னிலை பெறும்.

இந்தியாவில் கார் உற்பத்திக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக வளர்ந்து வருவதால்,இது நிச்சயம் சாத்தியமாகும் நிலை உள்ளது,"என்று கூறப்பட்டுள்ளது.

THANKS : THATSTAMIL

Friday, February 18, 2011

அத்வானி பெயரை நீக்கிய அலஹாபாத் நீதிமன்ற தீர்ப்பு தவறு- சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மீதான கிரிமினல் சதி குற்றச்சாட்டை நீக்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,உமாபாரதி, அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், வினய் கட்டியார், விஷ்ணு ஹரி டால்மியா, சாத்வி ரிதம்பாரா மற்றும் மஹாந்த் அவிதயா நாத் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கிரிமினல் சதி குற்றச்சாட்டு நீக்கப்பட்டதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது.

அதில் இவர்கள் மீதான மேற்கூறிய குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என சிபிஐ விடுத்த வேண்டுகோளை கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விடயத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மத்திய புலனாய்வு கழகமான சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

THANKS : WEBDUNIA

Monday, February 14, 2011

பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்

வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

பாடப்புத்தகம் தவிர, மென்திறன், தொடர்பியல் திறன் என்று தனிமனித மேம்பாடு பற்றிச் சிந்திக்கும் பள்ளிகள், சீருடை விஷயத்தில் அதன் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. வளர்இளம்பருவ மாணவிகள் அணியும் சீருடை, நிச்சயம் பாதுகாப்பானதாக இல்லை; மற்றவர்களின் கவனத்தை உறுத்தும் வகையில் இருக்கிறது. கோவையில் பள்ளிச்சிறுமி ஒருத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு; சிறுமியும், அவரது சகோதரனும் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்துக்குப் பிறகு, தாமதமாக விழித்துக் கொண்ட பெற்றோரும், கல்வியாளர்களும், சீருடையின் அளவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்துக்கு, தூண்டுதலாக அமைகிறது என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். வளர்இளம் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் சீருடை இல்லை. முழங்கால் வரையிலும், சில சமயங்களில் முழங்காலுக்கு மேலேயும் என்ற அளவில்தான் பாவாடைகள் இருக்கின்றன.புத்தகச் சுமையை, முதுகில் ஏற்றிக் கொண்டு செல்லும் பெண் குழந்தைகளின் பாடு சொல்லவே வேண்டாம். புத்தகப்பையை இரு தோள்கள் வழியாகச் செல்லும் கச்சையின் உதவியோடு சுமக்கின்றனர்; பின்னோக்கி இழுக்கும்சுமை, அவர்களின் முன்புற உடையை உடலோடு ஒட்டி இருக்கும்படிச் செய்கிறது. பெண்குழந்தைகள் உடையைச் சரி செய்யும் மனோபாவத்தில் இருப்பதில்லை. மாறாக, வீட்டுப்பாடம், தேர்வு, பள்ளி செல்லும் அவசரம், வீடு திரும்பும் அவசரம் என்பதில்தான் கவனம் இருக்கும்.
முன்னங்காலுக்கு மேலேயும், முற்புறத்தில் பலர் கண்களை உறுத்தும் வகையிலும் அணியும் "பினோபார்', பாவாடை சட்டை போன்ற சீருடை வகைகளும் கண்களை உறுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில சமூகவிரோதச் செயல்களுக்கு, இவ்வகையிலான தூண்டுதல்களே காரணம் என்ற புகாரும் உள்ளது.சீருடை அவசியம் என்ற போதும், அவற்றின் அளவும், அமைப்பும் சரியாக இருக்கிறதா என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பள்ளிச்சிறுமி படுகொலை செய்யப்பட்டபோது, சூட்டோடு சூடாக விவாதிக்கப்பட்ட சீருடை விஷயம், வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது.அடுத்த கல்வியாண்டு விரைவில் துவங்க உள்ள நிலையில், இதுகுறித்த முடிவு எட்டப்பட வேண்டும். சீருடை தொடர்பாக சிலரிடம் பேசினோம்.

அதிலிருந்து...

மனோத்தத்துவ நிபுணர் பொன்னி கூறியதாவது:தற்போதைய பெரிய பிரச்னைகளில் ஒன்று குழந்தைகளின் பாதுகாப்பு. குழந்தைகள் அதிக அளவில் கொல்லப்படுதல், பாலியல் கொடுமைகள் என, பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒழுக்கம் என்பது குழந்தைகள் மீதான பெற்றோர்களின் வளர்ப்பு முறையைத்தான் குறிக்கிறது. பெற்றோர்களே மாடர்ன் கலாசாரத்துக்கு மாறி வருகின்றனர். மாடர்ன் ஆடைகளை அணிவதும், உணவு பழக்கங்களை மாற்றுவதுமாக கலாசாரம் மாறி வருகிறது. இதன் அடிப்படை எங்கே என்று தேடினால், மற்ற நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொண்டது தான். கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருப்பினும், நமக்கு ஒத்துவராத விஷயங்களை மட்டும் காரணமே இல்லாமல் கற்றுக் கொள்கிறோம். நல்ல பழக்கங்கள் என்பது பெற்றோர்களிடம் இருந்து கற்க வேண்டியது. பெற்றோர்கள் முதலில் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழுக்கங்களை நாம் கற்று கொள்ளும் மற்றொரு இடம் பள்ளி. அடிப்படை கலாசாரங்களும், பண்பாடுகளும் கற்றுக் கொடுக்க வேண்டிய பள்ளிகளில் கூட ஒழுக்க விதிமுறைகள், தனிமனித பண்புகள், வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிக் கற்று கொடுக்க நேரம் இல்லை என்பது, இன்னும் பரிதாபமான விஷயம்.குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. "டிவி' மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தமும், தேவை இல்லாத ஊடுருவலும் அதிகம். அவற்றில் வரும் காட்சிகளும், முரண்பாடான கருத்துகளும் குழந்தைகளின் மனதில் அவர்களை அறியாமலே பதிவாகிறது. அவற்றைத் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, பொன்னி கூறினார்.

சர்வஜன பள்ளி தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்டர்நெட், சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமூகம், குழந்தைகளின் மீது தவறாகத் திணிக்கிறது. இன்னும் சொல்வதானால், பல பெற்றோர்கள் அத்தகைய சீருடைகளை விரும்புகின்றனர். தாய்மார்கள், குழந்தைகளுக்கு நல்ல விஷயங்கள், நடத்தை முறைகளைக் கற்றுத்தர வேண்டும்,'' என்றார்.

அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் சுகுணா கூறியதாவது:பெற்றோர் சம்மதத்தோடு தான் சீருடைகளை குழந்தைகள் அணிகின்றனர். இதற்கு காரணம் பள்ளி நிர்வாகமானாலும், இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. தங்களது குழந்தைகள் தவறாக சித்தரிக்கப்படுவதை, கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். அரசால், மெட்ரிக் பள்ளிகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சர்வதேச பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் சேர்க்கின்றனர்; அது தவறான கருத்தாகும். அரசு பள்ளிகளில் மட்டும் சீருடையாக சுடிதார்கள் இருப்பதை தவிர்த்து, அனைத்து பள்ளிகளிலும் இதனை கொண்டு வர வேண்டும். "பின்னோபார்' சீருடைகளோடு மட்டும் நின்றுவிடாமல், "மினிபார்' சீருடைகளும் வந்துவிட்டன. அது இன்னுமொரு கொடுமையான விஷயம். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் தான் பாதுகாப்பு அதிகம். அரசு பள்ளிகள் அதனை விளம்பரப்படுத்துவது இல்லை; ஆனால் தனியார் பள்ளிகள் செய்கின்றன. இத்தனை பிரச்னைக்கும் காரணம் பள்ளி நிர்வாகிகள் மட்டும்தான் என்று குறை கூற முடியாது. பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் அரசு, இதில் கவனம் செலுத்தி சீருடைகளை மாற்றி அமைக்க முடிவெடுக்கலாம். நம்முடைய கலாசார உடைகள், சீருடைகளாக வரலாம். அனைவரும் சுடிதார் மற்றும் பல விதமான நாகரீகமான உடை அணிவதன் மூலம், பல பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம்.இவ்வாறு, சுகுணா கூறினார்.

பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி முதல்வர் க்ரிஷ் கூறுகையில், ""ஆசிரியப்பணி சேவையாக இல்லாமல், தொழிலாக மாறிவிட்டது. வாழ்வியல் நெறிமுறைகளைக் கற்றுத்தருவதில்லை. "டிவி', இன்டர்நெட் போன்ற ஊடகங்களின் தாக்கத்தை, குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கின்றனர். ஆண், பெண் இருபாலினத்துக்கும், சகபாலினத்தின் மீது பரஸ்பர மரியாதை இல்லை. வெளிநாட்டு கலாச்சார மோகம், பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமான நல்லவை இருக்கின்றன. ஆனால், நமது சூழலுக்கு ஒத்துவராத உடை உள்ளிட்ட தேவையற்றவைகளை மட்டுமே பின்பற்றுகிறோம்,'' என்றார்.

ஸ்டேன்ஸ் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கிருஷ்ணன் கூறுகையில், ""பள்ளிச் சீருடைகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அதற்கேற்ற உள்ளாடைகளை அணிய, உடற்பயிற்சி ஆசிரியர்கள் வலியுறுத்திக் கொண்டே இருப்பர். சீருடைகள் மட்டுமே குற்றச்சம்பவங்களுக்கு காரணம் என சொல்ல முடியாது. இருப்பினும், பள்ளிச் சீருடை முறை மாற்றுவது குறித்து, நிர்வாகத்திடம் பேசி முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

ஜி.டி., பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், "சீருடைகளை இறுக்கமாக அணியாமல் இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போதும் விளையாட்டுத் தனமாகத்தான் இருக்கும்; அவர்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. சீருடைகளை மாற்றுவதை விட மக்களின் மனதை மாற்ற வேண்டும். கடந்த காலங்களில் இல்லாத குற்றச்சம்பவங்கள் தற்போது பெருகியதற்குக் காரணம், மக்களின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம்தான்,' என்றனர்.

சினிமாக்களில் சித்திரிக்கும் கெட்ட விஷயங்கள் தடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்களின் மனப்பாங்கு; தவறாக வழிகாட்டும், "டிவி', சினிமா துறைகள் பற்றி பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள், குற்றம் சாட்டின. துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவனும் மொபைல்போன் வைத்திருப்பது, அந்தரங்க விஷயங்கள் இன்டர்நெட்டில் மிக எளிதாக கிடைக்கும் அவலம் போன்ற பெற்றோரின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கும் விஷயங்களையும் அவர்கள் தெரிவித்தனர். பாடப்புத்தகங்களைச் சொல்லித்தருவது மட்டுமே கடமை என்றில்லாமல், பண்பாட்டுடன் குழந்தைகள் வளர்வதற்கும் கல்வி நிறுவனங்களே பொறுப்பு. கவனச்சிதறல் ஏற்படுத்தாத கட்டுப்பாடான உடைகள் வேண்டும் என்பதால் தா­ன், கல்வி நிறுவனங்கள் உடை விஷயத்தைத் தீர்மானிக்கின்றன. இது வரவேற்கத்தக்க ஒன்று; எனினும், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சீருடைகளின் அளவுகளை கல்வி நிறுவனங்கள் ஒருமுறை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

பெற்றோரே முன்னுதாரணம்! பேஷன் என்ற பெயரில் உடைகள் இன்று பெற்றுள்ள வடிவங்கள் பல. அதிலும், இன்றைய இளம் தலைமுறையினர் இதில் கலாச்சாரப் புரட்சியையே நடத்தி வருகின்றனர். இறுக்கிப் பிடிக்கும் மேற்கத்திய கலாசாரத்துடனான சில மாடர்ன் உடைகள் பலரது கண்களையும் உறுத்தவே செய்கின்றன. அதுவும், நமது உணவு மற்றும் புற சூழல்களால் இன்றைய குழந்தைகள் உடலளவில் அதீத வளர்ச்சியுடன் திகழ்கையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உடை விஷயத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதிலும், இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளே இன்று அதிகம் உள்ள நிலையில் பள்ளிச் சீருடைகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இன்டர்நேஷனல், சி.பி.எஸ்.சி., ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், அரசு பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இருந்தாலும் அரசு பள்ளிகள் தவிர மற்றவற்றில் நவநாகரிமான மேற்கத்திய பாணியிலான யூனிபார்ம்கள் (குட்டி ஸ்கர்ட்டுகள், பெல்ட், டை, ஷு) போன்றவற்றில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

நாளை நம் குழந்தைகள் வெளிநாடுகளில் பணியாற்ற படிப்பை விட இவையெல்லாம் தான் தலைமைத் தகுதிகள் என நினைக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.சுடிதார், தாவணி போன்ற கலாசார வகையிலான யூனிபார்ம்கள் அணிவது பலருக்கும் கட்டுப்பெட்டித்தனமாகவே படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பள்ளிகளை மட்டுமே குறை கூறுவதைத் தவிர்த்து பெற்றோர்களும் சற்று விழிப்புடன் இருக்கலாம். எந்த வகையானாலும் யூனிபார்ம் தைக்கும் போதே இறுக்கிப்பிடிப்பதாய் இல்லாமல் சற்று தளர்வாய், குழந்தைகளின் உடல்வாகுக்கேற்ப தைப்பது நலம்.

பெண் பிள்ளைகள் சீக்கிரம் வளர்ந்துவிடும் என்பதைக் குறிக்க, "பெண் பிள்ளைகள் வளர்த்தி பீர்க்கங்காய் வளர்த்தி' என்பார்கள் கிராமப்புறத்தில். எனவே, பெற்றோர்கள் இந்த விஷயத்தில் சிக்கனம் பார்க்காமல் ஆண்டுதோறும் குழந்தைகளின் வளர்ச்சிக்கேற்ப யூனிபார்ம்களை தைப்பது நலம். ஸ்கர்ட் அணிந்தாலும் சில பள்ளிகளில் முட்டிக்கால் வரையிலான ஸ்டாக்கிங்ஸ், லெகின்ஸ் போன்ற தரமான உள்ளாடைகள் அணிய வலியுறுத்துகின்றனர். இம்முறை இல்லாத பள்ளிகளில் பெற்றோர் தாங்களாகவே குழந்தைகளுக்கு இதை அணியப் பழக்கலாம். பின்புறமாக இருதோள்களில் அணியும் பைகளுக்கு பதிலாக ஒருபுறமாக அணியும் பைகளை வாங்கிக் கொடுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, பெற்றோர்கள் தாங்களாகவே ஒரு உதாரணமாகத் திகழ்வது குழந்தைகளையும் கலாசாரம் பிறழாமல் வாழச் செய்யும்...

THANKS : DINAMALAR.

பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை

மத்திய அரசின் பல்வேறு வரிகள் மீது, கல்விக்கான, "செஸ்' கட்டணம் வசூலிக்கப்படுவதால், இந்த தலைமுறை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி பெற, தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை என, அரசு பள்ளிகளில் படித்து வாழ்வில் சாதித்தோர் நம் நாட்டில் ஏராளம்.10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் சாதிப்போர் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடித்துக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இன்றும் நம் சமூகத்தில், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் கூட தங்கள் பிள்ளைகளை, "கான்வென்ட்' பள்ளிகளில் படிக்க வைக்கத் தான் விரும்புகின்றனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் சில தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, விண்ணப்பம் வழங்கப்படும் குறிப்பிட்ட நாளின் முதல்நாள் இரவே, அப்பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கவும் பெற்றோர் தயாராக உள்ளனர்.

பார்த்ததும் கவர்ந்திழுக்கும் சூழல், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதான பங்கு வகிக்கும் ஆங்கிலத்தில் பயிற்சி போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் முன்னுரிமை தருகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்டித்து, சென்னை உள்ளிட்ட இடங்களில், அவ்வப்போது பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதிலும் பலர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பள்ளி நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் மவுனம் காக்கின்றனர். இப்படி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்துகிறோம் என்ற நிகழ்கால உண்மையை பெற்றோர் உணராமல் இருப்பது, அவர்களின் அறியாமையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.

வருமான வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி ஆகிய மத்திய அரசின் வரி இனங்களின் மீது, 2005 - 06ம் நிதியாண்டு முதல் பள்ளிக் கல்விக்காக 2 சதவீதமும், 2008 - 09 நிதியாண்டு முதல் உயர்கல்விக்காக 1 சதவீதமும் செஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக, 23 ரூபாய் சேவை வரி விதிக்கப்படும் ஒருவரின் மொபைல் போன் பில்லுக்கு, 69 பைசா செஸ் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த வரி வருவாய், அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்ஷா அபியான்), மதிய உணவு போன்ற கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிடுகிறது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு இவ்வரியின் மூலமே கிடைக்கிறது.

பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதென்ற வாதம் தவறானது. அனைத்து பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்த நம் சமூகத்தின் பார்வை மாற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பட்ஜெட்டில், கல்விக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரத்து 36 கோடி ரூபாயில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, "செஸ்' கட்டணம் மூலமே அரசுக்கு கிடைத்துள்ளது' என்றார்.தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், பெற்றோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக, பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க இந்த தலைமுறை பெற்றோர் முன்வர வேண்டும். அப்போதுதான், தங்கள் காலத்தில் கல்லூரி படிப்புக்கு செலவு செய்த பணத்தை, தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்புக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற புலம்பலில் இருந்து அவர்கள் விடுபட முடியும். அரசு பள்ளிகளின் தரமும் மேலும் உயரும்.

THANKS : DINAMALAR

Sunday, February 13, 2011

VERY LESS MUSLIM STUDENTS IN TNPC EXAMINATION....

jkpo;ehl;by; gy;NtW muRg; gzp;fSf;fhf muR TNPC (Tamil Nadu Public Commision)  NjHTfs; gy;NtW fl;lq;fspy; elj;jp tUfpd;wJ. ,J Nghd;w muRj; NjHTfspy; K];ypk; khztHfs; kpff; Fiwthfg; gq;Nfw;Ws;sdH.

1983-k; Mz;L kj;jpa cs;Jiw mikr;rfk; rhHgpy; XH Ma;T elj;jg;gl;lJ. mjpy; F&g; 3 rHtP]; NjHTfspy; gq;Nfw;w 2>352 khztHfspy; 76 NgH (3.27 rjtPjk;) kl;LNk K];ypk;fs;. mNj Nghy F&g; 2 NjHtpy; gq;Nfw;w 497 Ngupy; 12 NgH (2.44 rjtPjk;) kl;LNk K];ypk;fs;. kj;jpa murhy; elj;jg;gLk; UPSC (Union Public Sevice Commision)  mfpy ,e;jpa rHtP]; fkp\d; NjHTfspy; 5.4 rjtPjk; NgHfs; kl;LNk gq;Nfw;Ws;sdh;.

,jw;F Kf;fpaf; fhuzk; ,j;NjHTfspy; gq;Fngw Fiwe;jgl;r fy;tpj; jFjp kw;Wk; taJ Mfpa midj;Jk; tuk;gpw;Fl;gl;ljhf ,Uf;f Ntz;Lk;. K];ypk;fSf;F caHfy;tpNa mspf;fg;glhj epiyapy; ,j;NjHTfspy; mtHfs; gq;Nfw;W ntw;wp ngw;W IAS, IPS, IFS Nghd;w caH gjtpfis tfpf;f rhj;jpaf;$Wfs; mw;Wf; fplf;fpd;wdH. rpyH Kaw;rpj;J ntw;wp ngw;whYk; NeHKfj; NjHtpd; NghJ mtHfs; jpl;lkpl;Nl K];ypk; vd;w fhuzj;jhy; epuhfhpf;fg;gLfpd;wdH. vdpDk; gy K];ypk;fs; khztHfs; fye;J nfhz;lhy; rpyUf;fhtJ ntw;wp fpl;lhkypUf;fhJ. mtHfs; %yk; tUq;fhy rKjhak; rPHglyhk;.

K];ypk; rKjhak; fy;tpapy; Kd;Ndw ngw;NwhHfs; jq;fs; Foe;ijfSf;F Muk;gk; KjNy fy;tpiag; gw;wpa rpwg;Gfisf; $wp MHt%l;lNtz;Lk;. khHf;fg; gpur;rhug; gzpfis Nkw;nfhs;Sk; midtUk; mt;tg;NghJ fy;tpapd; Kf;fpaj;Jtj;ij ,r;rKjhaj;jpdUf;F czHj;j Ntz;Lk;. xt;nthU ChpYk; gbj;j rpy K];ypk; ,isQHfs; ,Uf;fj;jhd; nra;fpwhHfs;> mtHfs; mg;gFjpapy; cs;s ,sk; khztHfSf;F Njitahd fUj;Jf;fisAk;> topfhl;LjiyAk; juNtz;Lk;. fy;tp Mz;bd; njhlf;fj;jpy; VNjDk; re;jHg;gq;fs; my;yJ fUj;juq;fk; Vw;gLj;jp ,jidg;gw;wpa mwpit ngw;NwhHfs; kw;Wk; khzt khztpfSf;F Nghjpf;f Ntz;Lk;. fy;tp gw;wpa rpe;jidahsHfs; xUq;fpize;J ,r;rKjhak; fy;tpapy; Kd;Ndw ghLgl Ntz;Lk;.

ek; rKjhaj;jpy; gbj;j ey;Ys;sk; gilj;jtHfshy; cUthf;fgl;l fy;tp cjtpj;njhif (Scholarship) toq;Fk; gy epWtdq;fs; khztHfSf;F ,iwkhHf;fj;ij gw;wp fw;gpf;fhky; fy;tp cjtpj; njhif toq;FtNjhL epd;WtpLfpwJ. MfNt ,g;gb mtHfspd; cjtpj; njhifahy; cUthf;fg;gl;l khHf;f mwptw;w rpy khztHfs; ekf;F gpwH cjtpaJNghy; ehKk; gpwUf;F cjtNtz;Lk; vd;w vz;zk; ,y;yhky; cUthfp tpLfpwhHfs;. MfNt cjtp nra;Ak; vz;zk; vd;w rq;fpyp njhlH Kw;Wg;ngw;W tpLfpwJ. MfNt fy;tp cjtpj;njhif toq;Fk; epWtdq;fs; cjtp ngWk; khztHfis tpLKiw fhyq;fspy; gpuj;Nahfkhf mioj;J ,];yhkpa mwpit Nghjpf;f Kd;tuNtz;Lk;. 

THANKS : ABDUL MALIK

கணக்கெடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம்; மின் கட்டணத்தை முன்னதாகவே இணையதளத்தில் செலுத்தும் வசதி.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மின்நுகர்வோர்களும் பயன்பெறும் பொருட்டு இணையதளம் மூலம் குறைவழுத்த மின்கட்டணம் செலுத்தும் வசதி மற்றும் வங்கி மின்னணு பட்டுவாடா முறையின் மூலம் உயர்வழுத்த மின் கட்டணம் செலுத்தும் வசதி கடந்த டிசம்பர் 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இவ்வசதிகள் மூலம் மின் நுகர்வோர்கள் எளிதாகவும் மற்றும் விரைவாகவும் தங்களுடைய மின்கட்டணத்தை சிரமமின்றி செலுத்த இயலும்.   மின்நுகர்வோர்கள் தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணைய தளம் மூலம் குறைவழுத்த மின்கட்டணத்தை ஆக்ஸிஸ், ஐசிஐசிஐ வங்கியின் கடன் அட்டை அல்லது எந்தவொரு வங்கியின் விசா, மாஸ்டர் கார்ட் அல்லது இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் பணஅட்டை அல்லது ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ்வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இணையதள வங்கி சேவையின் மூலம் எளிதாக செலுத்தலாம்.

பாரத ஸ்டேட் வங்கி, கரூர் வைசியா வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகியவை விரைவில் சேர்க்கப்படும். மின்நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு மற்றொரு புதிய திட்டமான 30 நாட்கள் மின் கணக்கீடு மற்றும் 30 நாட்கள் மின் கட்டண வசூல் என்ற முறை சென்னை, ஈரோடு மற்றும் கோவை மண்டலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இம்முறையின் மூலம் நுகர்வோர்கள் மின் கணக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த மின்நுகர்வோருக்கு மின்னஞ்சல் மூலம் மின் கட்டணம் மற்றும் கட்டண கடைசி தேதி பற்றிய விவரங்கள் முறையாகவும், குறித்த நேரத்திலும் தெரிவிக்கப்படுகின்றன.

மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலம் குறைவழுத்த மின்கட்டண முன்பணம் செலுத்தும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இவ்வசதியின் மூலம் மின்கட்டணம் நிலுவையில்லாத மின் நுகர்வோர்கள் முன்பணம் செலுத்தலாம்.

முன்பணம் செலுத்தப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட மின் கணக்கீடுகளுக்கு உண்டான கட்டணங்கள் தானாகவே முன்பணத்தில் நேர் செய்யப்படும்.  இணையதள வசதியினை மின்நுகர்வோர்கள் பயன்படுத்தி எளிதாக செலுத்தி பயனடையலாம்.

இணையதள இணைப்பை மேம்படுத்த தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இணையதள வசதியுள்ள கணிப்பொறி மூலம் மின்நுகர்வோர்கள் நேரத்தை வீணாக்காமல் எங்கிருந்து வேண்டுமானாலும் மின் கட்டணத்தை சிரமமின்றி செலுத்தலாம்.

Saturday, February 12, 2011

பொதுத்தேர்வு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆலோசனைகள்

பள்ளி பொதுத்தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம் இது. குறிப்பாக பிளஸ் 2 மாணவர்கள் தங்களது உயர்கல்வி வாய்ப்பை பிரகாசமானதாக்க மிகுந்த ஆர்வமுடன் தேர்வில் அதிக மதிப்பெண்களை குவிப்பதற்கான சிரத்தையில் ஈடுபட்டிருப்பதை உணரமுடிகிறது.
முறையான திட்டமிடல் மற்றும் ஆர்வத்துடன் படித்தால் அனைத்து மாணவர்களாலும் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வுக்கு எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதையும், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் எளியமுறையில் விளக்குகிறார் கோபாலபுரம் டி.ஏ.வி., பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், ஆர்.எம்.கே., குழும பள்ளிகளின் சீனியர் முதல்வருமான டாக்டர் சி.சதீஷ்.
* முதலில் தங்களால் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்று நம்புங்கள். தற்போது பொதுத்தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருப்பதால் புதியதாக ஒரு பாடப் பகுதியை படிப்பதை தவிர்ப்பது நல்லது. இது வரை படித்த பாடங்களை "ரிவ்யூ ' செய்ய வேண்டும். ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் உட்பட அனைத்து விதமான கேள்விகளுக்கும் எளிதாக பதில் அளிக்க இம்முறை உதவும்.
* அனைத்து பாடங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான பதில்கள் தெரிகிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். வகுப்பில் ஆசிரியர்கள் அறிவுறுத்திய முக்கியமான கேள்விகளையும், கேள்விகள் வேறு எந்தவகையில் கேட்கப்பட சாத்தியம் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வினா வங்கி புத்தகத்தையும் பயன்படுத்தலாம். மேலும் கடந்த ஐந்து அரசு பொதுத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளையும் வைத்து, அவற்றிற்கான பதில்களை மனதிற்குள்ளேயே சொல்லிப்பார்க்க வேண்டும்.
* எந்த கேள்விகள் கடினமாக உணரப்படுகிறதோ, அதற்கான பதில்களை கண்டிப்பாக எழுதிப்பார்க்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கே ஒரு சுயதேர்வு (டெஸ்ட்) வைத்து எழுதிப் பார்க்க வேண்டும். இதன்மூலம் மனதில் அந்த பதில்கள் நன்கு பதியும்.
* தேர்வு காலங்களில் படிப்புடன், உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஏனெனில் அனைத்திற்குமே அடிப்படை ஆரோக்கியம் தான். நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். பசியுடன் படிக்க வேண்டாம். அதிகமாகவும் சாப்பிட வேண்டாம். முக்கியமாக எண்ணெய் பொருட்கள், "ஜங்க்' உணவுகளை தவிர்க்கவும். தூக்கம் குறைந்தாலும் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, குறைந்தது 6.30 மணிநேரம் உறங்க வேண்டும். தேர்வு நடைபெறும் காலங்களில் 7 மணிநேரம் உறங்குவது அவசியம்.
* படிப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதும் அவசியம். வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள ஒரு தனி அறையில் படிப்பது நல்லது. இல்லாவிட்டாலும், தொந்தரவு இல்லாத இடமாக இல்லாமல் இருந்தால் கூட போதுமானது.
* "டிவி' பார்த்துக்கொண்டே படிக்கும் பழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். தேர்வு நாட்களில் செல்போனை "சுவிட்ச் ஆப்' செய்து வைப்பதும், நண்பர்களுடன் தேவையில்லாதவற்றை பற்றி பேசுவதையும் தவர்க்கவேண்டும்.
* பல மணிநேரம் தொடர்ந்து படிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு 1.30 மணிநேரத்திற்கு ஒருமுறை 30 நிமிடம் இடைவெளி விட்டு படிக்கலாம்.
* தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே சென்றுவிடுதல் நல்லது. தேர்வு மையத்தில் யாருடனும் பேசி அரட்டை அடிக்காமல், அமைதியாகவும், பதட்டமின்றியும் இருக்க வேண்டும். தங்களுக்கான இடத்தில் அமர்ந்த பிறகு, ஐந்து நிமிடம் பிராணயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்யவேண்டும். இது தேர்வு பயத்தையும், பதட்டத்தையும் குறைக்கும்.
* கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும் கேட்கப்பட்டுள்ள கேள்விகளை ஒருமுறை கவனமாக படித்துப்பார்க்க வேண்டும். விடைத்தாளை வாங்கியதும் அதில் நிரப்ப வேண்டிய கட்டங்களை கவனமாக நிரப்ப வேண்டும். தேர்வு எழுதும் போது முதலில் நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலெழுதி, பின்னர் கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அதில் தவறேதும் இல்லை. இதனால் மதிப்பெண்கள் குறைக்கப்பட மாட்டாது. கையெழுத்தை முடிந்தளவு தெளிவாக புரியும்படி எழுத வேண்டும். அதற்காக கையெழுத்தை சீர்செய்வதில் நேரத்தை செலவிட வேண்டாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கும்படி திட்டமிட்டு எழுத வேண்டும். ஒதுக்கப்பட்ட தேர்வு நேரத்தை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
* தேர்வு நேரத்திற்கு முன்பே எழுதி முடித்தால், எழுதியவற்றை சரிபார்க்கவும். அதில் தவறுகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அந்த இடத்தை அடித்துவிட்டு சரியான பதிலை தெளிவாக எழுதவும். தேர்வு நேரம் முடிவடையும் முன்பாக தேர்வு அறையை விட்டு வெளியேற வேண்டாம். விடைத்தாளை இறுதியாக கொடுப்பதற்கு முன்பாக, உங்களின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சரியாக விடைத்தாளில் எழுதியுள்ளீர்களா? என்பதை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

THANKS : DINAMALAR